Tirunelveli

News April 24, 2024

நெல்லையில் தேதி அறிவிப்பு

image

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நெல்லை பிரிவு சார்பில் பாளை அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் சீவலப்பேரி ரோடு நீச்சல் குளத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மூன்று கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் மே 2ஆம் தேதி தொடங்குகிறது. பயிற்சி கட்டணம் ரூ.1770. விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் – 74017035 06 என்ற என்னில் தொடர்பு கொள்ளலாம்.

News April 24, 2024

நெல்லை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்.23) வெளியிட்டுள்ள அறிக்கையில் உங்களுக்கு பரிசு விழுந்ததாக கூறி, செல்போனில் வரும் போலியான Message-யை நம்பி OTP, PIN, Password போன்றவற்றை யாரிடமும் பகிர வேண்டாம். ஒருவேளை பாதிக்கப்பட்டால் 1930 என்ற எண்ணை அழைக்கவும் என தெரிவித்துள்ளனர்.

News April 24, 2024

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் கேரளாவில் பிரச்சாரம்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான புரூஸ், கேரள மாநிலம் ஆற்றிங்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அடூர் பிரகாசை ஆதரித்து இன்று (ஏப்ரல் 23) தீவிர பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து அந்த தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

News April 24, 2024

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற திருநெல்வேலி செயலாளர்

image

திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிட்டார். அவரின் வெற்றிக்கு கடந்த ஒரு மாதமாக சிறப்பான முறையில் பணியாற்றிய திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் இன்று (ஏப்.23) முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News April 24, 2024

BREAKING நெல்லை: பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர்

image

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 36வது வார்டு மாமன்ற உறுப்பினராக சின்னதாய் கிருஷ்ணன் உள்ளார். அவர் இன்று (ஏப்‌.23) தனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்க்கு மனு அனுப்பியுள்ளார். அதில், எனது வார்டு மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு மாநகராட்சி உதவி செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News April 24, 2024

தண்ணீர் வேண்டி பெண்கள் போராட்டம்

image

திருநெல்வேலி மாவட்டம் கருங்காடு பகுதியில் கிராம மக்களுக்கு முறையான குடிநீர் கிடைக்கவில்லை என காலி குடங்களுடன் மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு இன்று (ஏப்.22) போராட்டம் நடத்தினர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மிகப்பெரும் போராட்டம் நடைபெறும் எனவும் அப்பகுதி பெண்கள் தெரிவித்துள்ளனர்.

News April 24, 2024

நெல்லையில் தொடரும் பறக்கும்படை சோதனை

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி நெல்லை மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

News April 24, 2024

நெல்லை – தூத்துக்குடி பஸ் சர்வீஸ் குறைப்பு

image

திருநெல்வேலி தூத்துக்குடி இடையே 1 -1 பஸ் சர்வீஸ் இயக்கப்படுகிறது. இடைவெளிகளில் நிற்காமல் செல்லும் இந்த பஸ்சிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த பஸ் சர்வீஸ் எண்ணிக்கையை தற்போது வெகுவாக குறைத்துள்ளனர். இதனால் இதில் பயணிப்பவர்கள் இடமின்றி ஒரு மணி நேரத்துக்கு மேலாக நின்று கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

News April 24, 2024

மக்களை பாதுகாக்க ஆணையாளர் முடிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாளை (ஏப்.23) உப்பு சர்க்கரை நீர் கரைசல் வழங்கும் முகாம் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இன்று (ஏப்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

ஒரே நேரத்தில் கல்யாணமும் துக்கமும்: 15 பேர் வழக்கு

image

அம்பாசமுத்திரம் அருகே ஒரே நேரத்தில் நடந்த திருமணம் மற்றும் துக்கம் நிகழ்வுகளால் ஏற்பட்ட மோதலில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலஏர்மாள்புரத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்ட தெருவில் திருமணம் நடந்ததால் இரு வீட்டாருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்தனர். இது குறித்து நேற்று (ஏப்.22) இரவு அம்பாசமுத்திரம் போலீசார் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!