Tirunelveli

News May 3, 2024

வெயில்: கலெக்டர் முக்கிய எச்சரிக்கை

image

வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின்படி நெல்லையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். எனவே கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அவசர தேவை இன்றி வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று (மே 2) விடுத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News May 3, 2024

வாக்கு எந்திரங்களை பார்வையிட்ட வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் கல்லூரி வளாகத்தை திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நேற்று (மே 2) மாலை அவற்றை பார்வையிட்டார். அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவருடன் சென்றனர்.

News May 3, 2024

நைனார் நாகேந்திரன் உறவினரிடம் சிபிசிஐடி விசாரணை

image

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மார்ச் 26இல் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.நேற்று (மே 2) நயினார் உறவினர் முருகன் ஆசைத்தம்பி ஆகியோரிடம் டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

News May 2, 2024

கடையில் வாங்கிய முறுக்கில் இறந்து கிடந்த பூரான்

image

நெல்லை உடையார்பட்டியில் வசிக்கும் குரு மகாராஜன் நெல்லை தனியார் ஸ்வீட் ஸ்டாலில் முறுக்கு வாங்கி வந்துள்ளார். அதனை சாப்பிட பிரித்து பார்த்தபோது அதில் பூரான் இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து கடைக்காரரிடம் கேட்ட போது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று (மே 2) குரு மகாராஜன் உணவு பாதுகாப்பு துறை தலைமை ஆய்வாளருக்கு புகார் அனுப்பி உள்ளார்.

News May 2, 2024

நெல்லை அழகிய மணிமுத்தாறு அருவி!

image

நெல்லையில், மாஞ்சோலை மலைக்கு அருகில் உள்ளது இந்த அழகிய மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி. 65 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக, மணிமுத்தாறு அணை 1958 இல் கட்டப்பட்டது. தாமிரபரணி ஆறு கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க காமராஜரால் கட்டப்பட்டது. அணைகட்டுடன் இருப்பதால் வார இறுதி நாட்களை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் கழிக்க இந்த இடம் ஏற்றதாக உள்ளது. மழைக்காலங்களில் வெள்ல நீராக ஆர்ப்பரித்து காட்சியளிக்கும்.

News May 2, 2024

பிரதான அணைகளின் இன்றைய நிலவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் இன்று (மே 2) காலை நிலவரப்படி நீர் இருப்பு 57.20 கன அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக 254.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது . இதேபோல் மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 88.70 கன அடியாக உள்ளது. இதிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது.

News May 2, 2024

தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வேண்டுகோள்

image

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு வரும் 7ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மே 2) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த உத்தரவை ரத்து செய்ய தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News May 2, 2024

பெற்றோர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (மே 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை காலத்தில் விடுமுறையில் வீட்டில் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்து அவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த உறுதுணையாக இருங்கள் என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

News May 2, 2024

தொடர்ந்து அச்சுறுத்திய 3 பேருக்கு குண்டாஸ்

image

கல்லிடைக்குறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் கைதாகிய ஆறுமுகம், அழகர், முத்துப்பாண்டி ஆகியோர் சிறையில் உள்ளனர். இவர்கள் கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையில் மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.

News May 2, 2024

நெல்லை: 103 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா தலைமையில் மே தின விடுமுறை நாளில் திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 103 நிறுவனங்களில் மே விடுமுறை தின சட்டத்தை அமல்படுத்தாமல் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!