India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் பெர்டின் ராயன் மீது கொலை வெறி தாக்குதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரை இன்று (மே 11) மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் ஹென்றி திபேன் சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளார். இதில் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நடத்த கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 10) வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநெல்வேலியில் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசார் மும்முரமாக கொலையாளிகளை தேடி வருகின்றனர். தொடர்ந்து அவரது உடல் கைப்பற்றப்பட்டு வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி தேடிவந்தனர். அப்போது கத்தி ஒன்று கிடைத்துள்ளது. இந்த கத்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

10 -ம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் பாளை, இக்னேஷியஸ் கான்வென்ட் பெண்கள் பள்ளி மாணவி பவதாரணி 500-க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை மாணவியை இன்று (மே.10) பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தி பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள், சக மாணவிகளும் சாதனை மனைவியை பாராட்டினர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியானது. இதில் திருநெல்வேலி மாவட்டம் 93.04% தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த தேர்வில் மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் நெல்லையில் 25 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 116 பள்ளிகள் 100/100 தேர்ச்சி பெற்று சென்டம் வாங்கி அசத்தி உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 94 அரசு பள்ளியில் 2984 மாணவர்களும், 3886 மாணவிகளும் ஆக மொத்தம் 6870 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியதில் மாணவர்கள் 2570 பேரும் மாணவிகள் 3666 பேரும் என மொத்தம் 6236 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 86.13 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 94.34 சதவீதமாகவும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி 90.77 சதவீதமாகவும் உள்ளது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90.77% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 86.13 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.34 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டம் 15ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளியை சேர்ந்த சஞ்சனா அணுஸ் என்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், பாக்கியலட்சுமி, சுப காயத்ரி ஆகிய இருவர் 498 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தினையும் ரஷிகா என்ற மாணவி 497 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்தவர்களை பள்ளி தாளாளர் திவாகரன் பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.