India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் KPKஜெயக்குமார் கடந்த 2-ம் தேதி தோப்பு விளைக்கு செல்வதற்காக இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 43 கிலோ மீட்டர் சுற்றி வந்துள்ளார். தனது வீட்டில் இருந்து கரைசுத்து புதூர் வழியாக தோப்பு விளைக்கு செல்வதற்கு வெறும் 15 கிலோ மீட்டர் தூரம் தான். ஆனால் 43 கிலோ மீட்டர் சுற்றி சென்று தோப்பு விளையை அடைந்துள்ளது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திரையரங்கிற்கு இன்று (மே 12) பிரபல இயக்குனர் வெற்றிமாறன் வருகை தந்தார். அவருக்கு திரையரங்கு உரிமையாளர்கள், அலுவலர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் ரசிகர்களுடன் பல்வேறு சினிமா அனுபவங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். இயக்குனரின் வருகையால் திரையரங்கில் விழாக்கோலம் பூண்டது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை கரைச்சுத்து புதூரில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் எரிந்து சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் இன்று (மே.12) தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று அங்கு டார்ச்லைட் கிடைக்கப் பெற்ற நிலையில் இன்று 10 பேர் கொண்ட தடவியல் துறை அதிகாரிகள் குழு அவர் பிணமாக மீட்கப்பட்ட பகுதியில் வேறு எதுவும் தடயங்கள் உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.

கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே பி கே ஜெயக்குமார் கடந்த 2-ம் தேதி அவரது சொந்த ஊரில் உள்ள ஒரு பேன்சி கடையில் டார்ச் லைட் வாங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட வீட்டிலிருந்து அந்த டார்ச் லைட் நேற்று (மே 11) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த டார்ச் லைட்டை தடவியல் நிபுணர்கள் குழுவினர் ஒரு முக்கிய தடயமாக கருதி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இன்று (மே12) காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணமடைந்தனர். சங்கர்நகர் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் லாரியின் பின்புறம் வேன் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இன்று (மே12) காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணமடைந்தனர். சங்கர்நகர் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் லாரியின் பின்புறம் வேன் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது வரை நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் இலவச பயணத் திட்டத்தின் மூலம் 9.64 கோடி மகளிர்,மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.12) மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

புதிய கல்வி ஆண்டில் நெல்லை அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இங்கு குரல் இசை, நாதஸ்வரம், தவில் தேவாரம் பரதநாட்டியம் வயலின் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்சிவிக்கப்படுகின்றன. 12 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04622900 926 மற்றும் 94438 10 926 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான இசை பயிற்சி வகுப்புகளில் சேர ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அரசு பண்பாட்டு மையத்தின் மூலம் நாதஸ்வரம் தேவாரம், தவில் உள்ளிட்ட பாரம்பரிய இசை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை, விலையில்லா கணினி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் இன்று (மே.11) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.