India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமாக உயிரிழந்த வழக்கில் நாங்குநேரி டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையில் போலீசார் திசையன்விளை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை நேற்று ஆய்வு செய்தபோது 2 நபர்கள் ஒரு பைக்கில் ஜெயக்குமார் சென்ற காரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வெப்பத்தின் அளவு தினம்தோறும் சதத்தை தாண்டி பதிவாகி வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. அந்த வகையில் இன்று மழை பெய்தாலும் மாவட்டத்தில் வெப்பத்தின் அளவு 80.7 டிகிரி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று (மே 13) பரவலாக கோடை மழை பெய்தது. இன்று காலை 6 மணி வரை மாவட்ட முழுவதும் மொத்தம் 102.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டை நெல்லையில் தலா 18 மில்லி மீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறு 15 மிமீ., கொடுமுடியாறு 12, நம்பியாறு 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நாங்குநேரி, நான்கு முக பகுதியில் தலா 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருநெல்வேலி மாவட்டம் 12 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 89.14% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 82.39 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.74 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் இருந்து சென்னையில் ரயிலில் கடந்த மாதம் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் பாஜக நிர்வாகி முரளி ஆகியோருக்கு இன்று சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே பி கே ஜெயக்குமார் மரணம் தொடர்பான விவரங்கள் ஒரு வாரத்திற்குள் தெரியவரும் என தென்மண்டல போலீஸ் ஐஜி கண்ணன் நெல்லையில் நேற்று (மே 13) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தனிப்படை போலீசார் விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. வழக்கின் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என்றார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் நேற்று நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தமாக 98.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக பாளையங்கோட்டை, ராதாபுரம், திருநெல்வேலி பகுதிகளில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 14) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் அம்பை, மணிமுத்தாறு, நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாபநாசம், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இதில் அதிகபட்சமாக பாளையங்கோட்டை, ராதாபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாகவும், விசாரணை திசை மாறி இருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
Sorry, no posts matched your criteria.