Tirunelveli

News May 18, 2024

பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்றும் ( மே18) நாளையும் மிதமானது முதல் ‘கனமழை’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தால் அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் என நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News May 18, 2024

நெல்லை மழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையையொட்டி பேரிடர் மீட்பு மேலாண்மை குழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

News May 18, 2024

ராதாபுரம்: கபடி போட்டியில் முதல் பரிசு ரூ.2 லட்சம்

image

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே மின்னொளி கபடி போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் பண்ணை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இருபாலர் பங்கேற்கும் மின்னொளி கபடி போட்டியை நேற்று(மே 17) இரவு முன்னாள் எம்பி சௌந்தர்ராஜன் துவக்கி வைத்தார். இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.2 லட்சமும், 2ம் பரிசு ரூ.1 லட்சமும் வழங்கப்பட உள்ளது.

News May 18, 2024

சேரன்மகாதேவியில் கரடி – காவல்துறை எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் நேற்று கரடி நடமாட்டம் இருப்பதாக இரவு ரோந்தில் இருந்த சேரன்மகாதேவி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இரவு நேரங்களில் பாதுகாப்பாக சென்று வரவும் எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கரடிகளை கண்டால் காவல்துறைக்கோ, வனத்துறைக்கோ தகவல் தெரிவிக்கும்படியும் கூறியுள்ளனர்.

News May 18, 2024

அம்பை அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை!

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் மகேஷ் சுப்ரமணியன் கூறியதாவது, தொழிற்பயிற்சிக்கு 8,10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் மேல்நிலைப் படிப்பு, பட்டைய படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இடைநின்ற மாணவர்கள் மாணவிகள் அனைவரும் நேரில் அல்லது இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் 7ம் தேதி கடைசி நாள் என நேற்று கூறியுள்ளார்.

News May 18, 2024

நெல்லை – தென்காசி சாலையில் திடீர் பனி மூட்டம்!

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைந்துள்ளது. தொடர்ந்து மாலை இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று(மே 18) அதிகாலை சில இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக நெல்லை – தென்காசி சாலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் சென்றன.

News May 18, 2024

நெல்லை: நூதன முறையில் ரூ.2 லட்சம் மோசடி!

image

பாளை., கேடிசி நகரை சேர்ந்த வாலிபரின் செல்போன் எண்ணிற்கு கடந்த பிப்.21ம் தேதி SMS லிங்க் வந்துள்ளது. அதில் இருந்த லிங்கை அவர் கிளிக் செய்தபோது தேசிய வங்கியின் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம் என ஆசை வார்த்தை தெரிவிக்கப்பட்டது. அந்த இணையதளத்தில் வாலிபர் தனது அக்கவுண்ட் நம்பர், யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்தவுடன் அவரது அக்கவுண்டில் இருந்து ரூ.2 லட்சம் திருடப்பட்டுள்ளது.

News May 18, 2024

மின்கம்பங்கள் அருகே செல்ல வேண்டாம்!

image

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழையும் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இடி, மின்னலுடன் மழை பெய்வதால் பொதுமக்கள் மின்கம்பங்கள் அருகே செல்ல வேண்டாம். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என நெல்லை மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கான விளக்க அறிவிப்புகளை சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகிறது.

News May 18, 2024

யோகா பயிற்சி: சித்தா கல்லூரி புதிய அறிமுகம்

image

வீட்டிலேயே மொபைல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் மூலம் யோகா பயிற்சி வீடியோவை பார்த்து மேற்கொள்வதற்கான வசதியை திருநெல்வேலி அரசு சித்த மருத்துவ கல்லூரி அறிமுகம் செய்துள்ளது. இதற்காக கல்லூரியில் “QR code” வழங்கப்படுகிறது. இதை ஒரு முறை ஸ்கேன் செய்து செல்போனில் பதிவேற்றம் செய்தால் இதன் மூலம் பார்த்து யோகா பயிற்சியை மேற்கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

News May 18, 2024

நெல்லை: தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்

image

நெல்லை மாவட்டத்தில் மே 18 மற்றும் 19ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (மே 17) சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு தமிழ்நாடு காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினர் ஒரு ஆய்வாளர் தலைமையில் 90 காவலர்கள் வந்தனர். பேரிடர் மீட்பு பணிகளுக்காக அவர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!