India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 முதன்மை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. நவ.7 அன்று காலை 10:30 மணிக்கு இந்த பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. திறன் வாய்ந்த ஆசிரியர்கள், ஸ்மார்ட் போர்டு வசதியுடன் பயிற்சி அளிக்க உள்ள நிலையில் வாராந்திர மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். SHARE IT

கொங்கந்தானபாறையை சேர்ந்த சுபின் வண்ணார்பேட்டையில் இருந்து வடக்கு பைபாஸ் ரோடு வழியாக வெள்ளகோவில் செல்லும் சாலையில் சென்றுள்ளார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி ஏடிஎம் கார்டு, செல்போன், தங்க செயினை பறித்து சென்றனர். இதில் காயமடைந்த சுபின் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குது பாளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லை மாநகரில் வீடுகளுக்கு குடிநீர் கட்டணம் ரூ.100 இருந்த நிலையில் அதனை வீடுகளின் பரப்பளவு அடிப்படையில் ரூ.120 முதல் ரூ.300 வரை உயர்த்தப்பட உள்ளது. மேலும் பாதாள சாக்கடைக்கான டெபாசிட் தொகை ரூ.5000-ல் இருந்து அதிகபட்சம் ரூ.40,000 வரை உயர இருக்கிறது. நவ.11 அன்று நடைபெறும் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் கார்த்தி மணி உத்தரவுபடி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை இரவு காவல் பணியில் செயல்படும் அதிகாரிகள் காவல் நிலைய பகுதி வாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விபரங்களும் தரப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த அக்டோபர் 7ம் தேதி நெல்லைக்கு வருகை தந்தார் அவர் சிந்து பூந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை சென்று அங்கே ஆற்றைக் காப்பாற்ற கோரி கோஷமிட்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் முறையாக அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அன்புமணி உள்ளிட்ட 4 பேர் மீது நெல்லை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

களக்காடு பத்மநேரியைச் சேர்ந்த இசக்கி என்ற 21 வயது இளைஞர் இடது கை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவ அலுவலர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்து மீண்டும் கையை வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளனர் என டீன் டாக்டர் ரேவதி பாலன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிகிச்சை அளித்த டாக்டர்களை அவர் பாராட்டினார்.

நெல்லை மக்களே, உங்கள் ஏரியாவில் உள்ள குறைகளை தெரிவிக்க உங்கள் பகுதி தாசில்தார் செல்போன் நம்பரை அவசியம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்..
திசையன்விளை- 9384094224
சேரன்மகாதேவி- 9384094223
மானூா்- 9384094222
இராதாபுரம்- 9445000674
நாங்குநேரி- 9445000673
அம்பாசமுத்திரம்- 9445000672
பாளையங்கோட்டை- 9445000669
திருநெல்வேலி- 9445000671
இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க.

காசி தர்மத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் (30). கூலித் தொழிலாளியான இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிறைக் கழிவறையில் கடந்த 14 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில் பேச்சுவார்த்தையில் 21 தினங்களுக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.