India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஏராளமான போலீசார் குவிந்தனர். கேடிசி நகரில் ரவுடி தீபக்ராஜா நேற்று மதியம் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (மே 21) கொலையாளிகள் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராகலாம் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நீதிமன்றம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நீதிமன்றத்திற்கு ஆஜராக வரும்போது கொலையாளிகளை கைது செய்து விடலாம் என காவல்துறை திட்டமிட்டதாக தெரிகிறது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று தீபக் ராஜா (34) என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டப் பகலில் நடந்த இந்த கொடூர கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தேடி வரும் நிலையில் இன்று (மே 21) போலீசார் கொலையாளிகளை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தென் தமிழக கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்றும், நாளையும் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் இன்று காலை தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் பேட்டை எம்ஜிஆர் நகர் ஜெகஜீவன் தெருவில் வசித்துவரும் தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். சரிவர காது கேட்காத சண்முகம் நேற்று (மே 20) மாலை பஜாருக்கு செல்வதற்காக ரயில்வே தண்டவளத்தை கடந்தபோது, செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்குச் சென்றுகொண்டிருந்த அதிவேக ரயில் அவர் மீது மோதியதில் அவர் பலியானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா வருகின்ற ஜூன் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு மற்றும் திமுக பவள விழா ஆண்டு உறுப்பினர் உரிமை சீட்டுகளில் இரண்டாவது கட்டமாக வந்துள்ள உறுப்பினர் சீட்டுகளை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பனிடமிருந்து வள்ளியூர் ஒன்றிய தலைவர் ராஜா ஞானதிரவியம் இன்று (மே 21) பெற்று கொண்டார்.

தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் உட்பட பாஜக நிர்வாகிகள் சிலர் உத்திரபிரதேச மாநிலத்திற்கு நேற்று (மே 20) சென்றனர். அங்கு அவர்களுக்கு அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தமிழக பாஜக நிர்வாகிகள் உத்திரபிரதேசத்தில் தங்கி இருந்து பாஜக வெற்றிக்கு தேர்தல் பணியாற்ற உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டன. மேலும் மீட்பு படைகளும் வரவழைக்கப்பட்டன. நேற்று மாவட்ட பகுதிகளில் கனமழை இல்லை. இதனால் ரெட் அலர்ட் நீங்கியது. இருப்பினும் மஞ்சள் அலர்ட் தொடர்கிறது.

பாளையங்கோட்டை அன்பு நகர் மேம்பாலம் திறக்கப்பட்ட பின் கீழ் பகுதியில் உள்ள ரயில்வே கேட் முழுமையாக மூடப்பட்டது. அங்கு சுரங்கப்பாதை பணி தொடங்கப்படாத நிலையில் பாதசாரிகள் செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களுக்கு அனுமதிக்காக முறையிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று (மே 20) இரவு முதல் இந்த பாதையில் இருசக்கர வாகன ஓட்டிகளும் கடந்து செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளது.

பாளையங்கோட்டை கேடிசி நகரில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் பாண்டியன் 6 பேர் கொண்ட கும்பலால் இன்று (மே.20) வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்கள் கேடிசி நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் பதட்டம் நிலவுகிறது.

நெல்லை மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து தோவாளை கால்வாய் வழியாக ராதாபுரம் கால்வாய் மூலம் 16,000 ஏக்கர் பாசனம் மற்றும் 52 குளங்கள் நீர் பாசனம் பெறுகின்றன. தற்போது ராதாபுரம் கால்வாயில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு முதல்வருக்கு இன்று கோரிக்கை வைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.