Tirunelveli

News May 27, 2024

way2 நியூஸ் எதிரொலி: மரங்கள் வெட்டி அகற்றம்

image

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணி புரத்தில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. அங்கு மின்கம்பியில் உரசி கொண்டிருந்த முள் மரத்தால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து இன்று way 2 நியூஸில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு அங்கு மின் கம்பியில் உரசி கொண்டிருந்த முள் மரங்களை வெட்டி அகற்றினர். இந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

News May 27, 2024

நெல்லை மாவட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

image

இந்திய அரசு சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த விருதுக்கு தகுதியான நபர்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்ற மே 31ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 27, 2024

நெல்லையில் கடுமையான வெயில்: மக்கள் அவதி

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் மழை குறைந்ததை முன்னிட்டு வெயில் வெளுத்து வாங்க துவங்கியுள்ளது. அந்த வகையில் இன்று (மே 27) காலை முதல் வெயில் வெளுத்து வாங்குவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் நாளை (மே 28) அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 27, 2024

தீபக் ராஜாவின் உடல் ஒப்படைப்பு

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கடந்த வாரம் வெட்டி கொலை செய்யப்பட்ட தீபக்ராஜாவின் உடல் இன்று (மே 27) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல், போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

News May 27, 2024

பைக் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி

image

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள பொன்னாக்குடி பாலத்தின் மீது நெல்லையில் இருந்து இன்று (மே 27) நாகர்கோவில் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற சங்கரன்கோவிலை சேர்ந்த சதீஷ் குமார் (23) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கபிலேஸ்வரன் (22) ஆகிய இருவரும் 4 வழிச்சாலையில் உள்ள பாலத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News May 27, 2024

அரசியல் கட்சியினருக்கு சம்மன் அனுப்ப முடிவு

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மரண வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் மரண வாக்குமூலம் கடிதத்தில் கூறிய அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களையும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் இன்று தெரிவித்தனர்.

News May 27, 2024

நெல்லை: திக் திக் மனநிலையில் வேட்பாளர்கள்

image

திருநெல்வேலி மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் பாளை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் வாக்கு எண்ணுவதற்கு 7 நாட்களே உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி இன்று (மே 27) ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் திக் திக் மனநிலையில் உள்ளனர்.

News May 27, 2024

நெல்லை: ஆலய விழாவில் திமுக மா.செ. பங்கேற்பு

image

கடையம் அருகே மேட்டூர் பரிசுத்த திரித்துவ ஆலயம் 131வது பிரதிஷ்டை விழா கடந்த 24ஆம் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நேற்று சிறப்பு விருந்தினராக திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இதில் கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ், மாயவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

News May 26, 2024

கடல் காற்று: மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்த 5 தினங்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 26, 2024

நெல்லை பாடகருக்கு இளம் பாடகர் விருது

image

சென்னை எழும்பூரில் அகில இந்திய அனைத்து பத்திரிகை ஊடக செய்தியாளர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் ரஷ்மி ரூமி தலைமையில், நேற்று விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற, அமெரிக்க அரசின் டிப்ளமேட்டிக் ஹோல்டர் மற்றும் முன்னாள் இன்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட் (ICC) நீதிபதி டாக்டர் மது.கிருஷ்ணன், நெல்லை பாடகர் செய்யது அலாவுதீனுக்கு சிறந்த இளம் பாடகர் விருது வழங்கி பாராட்டினார்.

error: Content is protected !!