India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டம் பாராளுமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்பே தனது தேர்தல் பணியை தொடங்கினார். பிரதமர் மோடியே வந்து அவருக்காக பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் அவர் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு 60,000 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். எம்பி போனாலும் அவருக்கு எம்எல்ஏ பதவிஇருப்பது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்று வருகின்றது. இதில் ஒன்பதாவது சுற்று முடிவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 35,353 வாக்குகள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளார். இதன் காரணமாக அதிமுக நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

நெல்லை நாடாளுமன்ற தொகுதி 9வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 60,021 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்தார்.
ராபர்ட் புரூஸ் (காங்) – 1,82,101
ஜான்சிராணி (அதிமுக) – 32,186
நயினார் நாகேந்திரன் (பாஜக) – 1,22,080
சத்யா (நாதக) – 35,353 வாக்குகள் பெற்றுள்ளனர். தொடர்ந்து எண்ணிக்கை நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டம் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது .தொடர்ந்து ஆறு தொகுதிகளிலும் இன்று காலை முதலே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் இருந்து வருகிறார். தொடர்ந்து தற்போது எட்டாவது சுற்றில் 60 ஆயிரத்து 21 வாக்கு வித்தியாசத்தில் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் இருக்கிறார்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. இதில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை நிலவரப்படி 50,493 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் உள்ளார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 6வது சுற்றில் காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
காங். – 1,36,957
பாஜக – 93,481
நாதக – 27075
அதிமுக – 25322
6ம் சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து 4ம் இடத்தில் உள்ளது.
இதுவரை எண்ணிய மொத்த 2,96,366 வாக்குகள் பதிவாகியுள்ளன.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதை தொடர்ந்து நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சுமார் 40,000 வாக்குகளுக்கும் கீழே பின்தங்கியதால் உடனடியாக நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து அவசர அவசரமாக வெளியேறினார். இதனால் அங்கு பாஜக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு. 5வது சுற்றில் காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 35,543 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை
காங். – 1,15,762
பாஜக – 80,219
நாதக – 22,715
அதிமுக – 21,651
5ம் சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து 4ம் இடத்தில் உள்ளது.
இதுவரை எண்ணிய மொத்த வாக்குகளாக 2,51,807 உள்ளது.

நெல்லை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியானது நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து இன்று காலை முதலே தீவிரமாக எண்ணப்பட்டு வருகிறது. இதில் காலையில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் இருக்கிறார். இதனால் பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரன் மனவருத்தத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து தற்போது வெளியேறினார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி 4 வது சுற்று முடிவுகள் சற்று முன் அறிவிக்கப்பட்டன. இதன்படி காங்கிரஸ் – 91708, பாஜக – 63706, அதிமுக – 17206 நாதக – 17768 ஓட்டுகள் பெற்றுள்ளன.
வாக்கு வித்தியாசம்- 28002 ( காங்கிரஸ் முன்னிலை) தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலை வகிக்கிறார். இதனால் இவரது வெற்றி மெல்ல மெல்ல உறுதியாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.