Tirunelveli

News June 10, 2024

நெல்லைக்கு வந்த தமிழ்நாடு தேர்தல் ஆணையர்

image

தமிழ்நாடு தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி இன்று (ஜூன் 10) நெல்லைக்கு வருகை தந்தார். தொடர்ந்து அவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்,மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆணையாளர்கள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

News June 10, 2024

கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்

image

சுமார் 40 தினங்களுக்கு பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலகிக் கொள்ளப்பட்டதால் இன்று (ஜூன் 10) மீண்டும் மக்கள் குறை இருக்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து காலை 9 மணி முதல் ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் பலத்த பரிசோதனைக்கு பின்னர் மனு அளிக்க அனுமதித்தனர்.

News June 10, 2024

ஆயுத பூஜைக்கு முன்பதிவு நாளை தொடக்கம்

image

தமிழகத்தில் இந்த ஆண்டு ஆயுத பூஜை வரும் அக்டோபர் 11ஆம் தேதி, விஜயதசமி 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளன. இதற்காக அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் 9ம் தேதி ஊருக்கு புறப்பட்டு செல்வோர் நாளை 11 ம் தேதி முன் பதிவுகளை மேற்கொள்ளலாம். பத்தாம் தேதி வியாழன் அன்று செல்பவர்கள் வரும் 12ஆம் தேதி முன்பதிவுகளை மேற்கொள்ளலாம் என நேற்று ரயில்வே அறிவித்துள்ளது.

News June 10, 2024

50 நாட்களுக்கு பின் காலை உணவை ருசித்த மாணவர்கள்

image

நெல்லை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு முன் அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. 50 நாட்களுக்கு பின் பள்ளிகள் இன்று திறக்க பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். தச்சநல்லூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இன்று காலை வருகை தந்த மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மாணவர்கள் அதை உற்சாகத்துடன் ருசித்து சாப்பிட்டனர்.

News June 10, 2024

பள்ளி திறப்பு: காலையிலேயே கடும் ட்ராபிக்

image

கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று (ஜூன் 10) காலை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதன் காரணமாக காலை 7 மணி முதலே கிராமப் பகுதியில் இருந்து மாணவ மாணவிகள் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் மற்றும் பள்ளி வாகனங்களில் வந்து குவிய தொடங்கினர். இதனால் காலை 7.30 மணிமுதல் பாளையங்கோட்டை பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்தை சீரமைத்தனர்.

News June 10, 2024

நெல்லை பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

image

நெல்லை மாவட்டம் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று (ஜூன் 9) மாலை பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக மோடி இன்று பதவி ஏற்றதைத் தொடர்ந்து பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதில் அப்பகுதி பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News June 9, 2024

பேருந்து நிலையத்தில் கூடிய பெருங்கூட்டம்

image

நெல்லை மாவட்டத்தில் இருந்து கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறக்கப்படுவதால் ஏராளமானோர் இன்று (ஜூன் 9) வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனையொட்டி திருநெல்வேலியிலிருந்து சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். மேலும் சென்னை செல்லும் ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

News June 9, 2024

நெல்லை மாவட்டத்தில் 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

நெல்லை மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழிப்பறி, திருட்டு, கடத்தல் பாலியல் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் 7ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கி வைத்திருந்ததாக ரவுடி ஜேக்கப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News June 9, 2024

டிஎன்பிஎஸ்சி தேர்வு: 13,337 பேர் ஆப்சென்ட்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு இன்று (ஜூன்.9) அமைதியாக நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 57,778 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 13,337 பேர் தேர்வு எழுத வரவில்லை. 44,441 பேர் தேர்வு எழுதினார் 23 சதவீத பேர் ஆப்சென்ட் ஆகினர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News June 9, 2024

“க்யூ ஆர்” கோடு மூலம் கருத்து கேட்பு

image

நெல்லை முழுமை திட்டம் செயல்படுத்துவதற்காக உள்ளூர் திட்டக் குழுமம் சார்பில் மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது. இதற்காக “கியூ ஆர்” கோடு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பேருந்து நிலையம் உள்ள பொது இடங்களிலும், பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!