India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இன்று (ஜூன்.30) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் SBI reward points மூலமாக சைபர் குற்றவாளிகளின் மோசடியில் சிக்கி விடாதீர்கள். மொபைலில் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் முன் நன்கு யோசியுங்கள். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime. gov. in/ ல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களில் பணியாற்றி வந்த சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட 31 பேரை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்துள்ளதாக நெல்லை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், பணியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகர பகுதிகளான பாளை மற்றும் பேட்டை பகுதிகளில் மட்டும் தான் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. மாநகரப் பகுதி விரிவாகி வருவதால், அவசர தீ தடுப்பு பேரிடர் மீட்பு பணிகளுக்கு குறித்த நேரத்தில் போக்குவரத்து நெரிசலைக் கடந்து உரிய இடத்துக்கு செல்வது சவாலாக உள்ளது. இதையடுத்து, நெல்லை நகர் பகுதியில் மேலும் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

‘தமிழ்நாடு நாள்’ விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் 6 முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்டவை நடைபெற உள்ளன. நெல்லை ரத்னா தியேட்டர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், வரும் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்தப் போட்டிகள் நடைபெறும் என்றும், முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தலையணையில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து வெள்ளம் குறைந்ததை தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு இன்று குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீரின் அளவு அதிகரித்தால் மீண்டும் தடை விதிக்கப்படும் என முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 29) கூறியதாவது, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 101.90 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 78.64 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 115.81 அடியாகவும் உள்ளது. பாபநாசம் மணிக்கு சுமார் 2000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது, அணையில் இருந்து 806 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணைப்பகுதிகளில் 2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 28) விடுத்துள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு வரும் சுதந்திர தின விழாவில் ரொக்க பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடை உள்ள தங்க பதக்கம் மற்றும் 50,000 ரொக்கப் பரிசு சான்றிதழ் வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தை திமுக மற்றும் தோழமை கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது நெல்லை திமுகவில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. ஏற்கனவே மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு தலையிட்டு காவுன்சிலர்களை சமாதானப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று(ஜூன் 28) தெரிவித்ததாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022, 2023 ஆகிய 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை அதிக மழைப் பொழிவை தந்துள்ளது. இதையடுத்து விவசாய வசதிக்காக பல்வேறு பாசன கால்வாய்களில், அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நெல்லை உட்பட 7 மாவட்டங்களில் இன்று(ஜூன் 28) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.
Sorry, no posts matched your criteria.