India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை, கன்னியாகுமரி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 25ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக நாங்குநேரி டோல்கேட் அருகில் பிரமாண்டமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று (மார்ச் 20) மாலை ஆய்வு செய்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்த அன்பு சுவர் நேற்று முன்தினம் நீக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அன்பு சுவர் நீக்கப்படவில்லை, மாறாக நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே செயல்பட்டு வருகின்றது .மேலும் சில இடங்களில் அன்பு சுவர் அமைக்கப்படும் பணி தேர்தலுக்குப் பின் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
நெல்லை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக, அண்மையில் அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். எம்பி தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இபிஎஸ் இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார். நெல்லைக்கு அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழன் 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை சிக்னல் பணிகள் காரணமாக நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்படுகிறது. அதன்படி இந்த ரயில் இன்று (மார்ச் 21) முதல் வரும் 27ஆம் தேதி வரை 6 நாட்கள் நெல்லையிலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே நேற்று (மார்ச் 20) இரவில் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் நேற்று (மார்ச் 20) வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று யாரும் வந்து மனு தாக்கல் செய்யவில்லை, போலீசாரின் சோதனை மட்டுமே நடைபெற்றது.
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக சார்பில் நாளை மறுநாள் (மார்ச் 23) காலை 10 மணியளவில் வண்ணார்பேட்டை தனியார் ஹோட்டலில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்க நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா நேற்று (மார்ச் 20) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லையில் பாஜக தேர்தல் விதிமுறை மீறல் குறித்து இன்று (மார்ச் 20) புகார் அளிக்கப்பட்டது. நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அலுவலக வாயிலில் பிரதமர் மோடி படத்துடன் கூடிய விளம்பர பலகை வைக்கப்பட்டது. இந்த தேர்தல் விதி மீறல் குறித்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் நடராஜன் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மார்ச் 24 மற்றும் ஏப்.7ம் தேதிகளில் நடக்கிறது. அதில் 24ம் தேதி பங்குனி உத்திரம், குருத்தோலை ஞாயிறு ஆகிய விழாக்கள் இருப்பதால் பயிற்சி வகுப்பை மாற்று தேதியில் நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 20) அவசர கோரிக்கை மனு அளித்தனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இந்தநிலையில் நாளை (மார்ச் 21) தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில் நெல்லை தொகுதியில் சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேட்பாளராக போட்டியிடுவதற்கு நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் இன்று (மார்ச் 19) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.