Tirunelveli

News March 23, 2024

நெல்லை: கொடூரமாக வெட்டி படுகொலை!

image

2017ல் திசையன்விளை பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தேவபாலன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் அவரது மகன்கள் சேர்ம துரை, சுரேஷ் ஆகியோர் டிரைவர் தேவபாலனை அப்பகுதியில் உள்ள அம்மன் கோயில் ஓடையில் நேற்று (மார்ச் 22) கொடூரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். திசையன்விளை போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 23, 2024

நெல்லை தொகுதியில் 1795 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்

image

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1491 ஓட்டு சாவடிகளுக்கு 1795 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 1944 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களுக்கான கிட்டங்கி நெல்லை டவுன் தாலுகா அலுவலகத்தில் உள்ளது.நெல்லையில் உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு இணைய வழி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவு பெற்றது என ஆட்சியர் நேற்று (மார்ச் 22) தெரிவித்தார்.

News March 23, 2024

நெல்லை: அளவற்ற மகிழ்ச்சியில் மாணவர்கள்

image

தமிழகம் முழுவதும் நேற்று (மார்ச் 22) பிளஸ் 2 தேர்வு முடிந்தது. நெல்லை மாவட்டத்திலும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் டூ தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ மாணவிகள் தங்கள் அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து செய்தியாளரிடம் அவர்கள் கூறும் போது பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்புக்கு செல்லும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர்.

News March 22, 2024

பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக கூட்டம்

image

திருநெல்வேலியில் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று (மார்ச் 22) கூடியது. இந்த கூட்டத்திற்கு பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் பவானி வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் கடந்த வாரம் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடன் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து இதுவரை எந்த பதிலும் வராதது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது.

News March 22, 2024

விகே. புரத்தில் போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

image

விகே. புரம் கட்டப்புளியை சேர்ந்தவர் பாபநாசம் (74). இவர் அந்த பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் சம்பவத்தன்று கடைக்கு இட்லி வாங்க வந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் பாபநாசத்தை போக்சோ சட்டத்தில் இன்று ( மார்ச் 22 ) கைது செய்தனர்.

News March 22, 2024

நகராட்சியில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

image

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான இடத்தில் வேறொரு நபர் ஆக்கிரமித்து வீடு கட்ட தொடங்கியுள்ளார். இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று (மார்ச் 22) மாரியப்பன் நகராட்சி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

News March 22, 2024

தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ளார். அதனை தொடர்ந்து அவர் இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளித்த தேசிய தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

பத்திரிகையாளர்களுக்கு தபால் ஓட்டு வாய்ப்பு

image

மக்களவை தேர்தலில் அலுவலகப் பணி காரணமாக அரசு அங்கீகார அட்டை மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, பஸ் பயண அட்டை வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள், ஆசிரியர், செய்தியாளர், புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர் தேர்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலை உள்ளது. இவர்கள் அஞ்சல் மூலமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பிஆர்ஓ அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கப்படும்.

News March 22, 2024

நெல்லையில் வைரலாகும் தேர்தல் அழைப்பிதழ்

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் என்ற காகிதத்தின் புகைப்படம் நெல்லையில் வைரல் ஆகி வருகின்றது. அதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் 100 விழுக்காடு வாக்குப்பதிவு நமது மாவட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

News March 22, 2024

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி ஆய்வு

image

நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே வருகிற 25ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை கன்னியாகுமரி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக 40 ஏக்கரில் பிரமாண்டமாக விழா மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார் ஆகியோர் நேற்று (மார்ச் 21) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

error: Content is protected !!