Tirunelveli

News July 14, 2024

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் சபாநாயகர்

image

ஊரகப் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை விரிவுபடுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் நாளை காலை(15.7.2024) தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள காமராஜர் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைக்க உள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

News July 14, 2024

நெல்லையில் ஆம்னி பேருந்தை கடத்திச் சென்றவர் கைது

image

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்தை, நேற்று(ஜூலை 14) பேருந்தின் கிளீனர் வேல்துரை கடத்திச் சென்று சாலையோரம் நின்ற இருசக்கர வாகனங்களை இடித்துவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தில் பேருந்தை மடக்கிப்பிடித்த போலீசார், கிளீனர் வேல்துரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 14, 2024

நெல்லை ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு

image

நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள பிரேத பரிசோதனை மையத்தை இடமாற்றம் செய்ய கோரி நெல்லை வழக்கறிஞர் சிதம்பரம் தாக்கல் செய்த பொதுநல மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று கருத்து தெரிவித்துள்ளது. அதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பொதுபோக்குவரத்து பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

News July 13, 2024

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், திருவள்ளூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 13, 2024

நெல்லையில் 2.524 தேர்வர்கள் ஆப்சென்ட்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூலை 13) கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு 27 மையங்களில் நடந்தது. இதில் மொத்தம் 7,598 தேர்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 5 ஆயிரத்து 75 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 2524 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

News July 13, 2024

பாஜக மாவட்ட செயலாளருக்கு போலீஸ் வலை

image

வி.கே.புரம் வி.ஏ.ஓ. அலுவலகம் முன்புள்ள மரத்தில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உருவபொம்மையை தூக்கில் தொங்கவிடுவதுபோல் கட்டிச் சென்றனர். நகர தலைவர் முருகேசன் வி.கே.புரம் போலீசில் புகார் அளித்தன் பேரில், வழக்கு பதிந்த போலீசார் நகர பாஜக மகளிர் அணி செயலாளர் சந்தன குமாரி கணவர் பாண்டிராஜாவை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து பாஜக மாவட்ட செயலாளர் தங்கேஸ்வரனை தேடி வருகின்றனர்.

News July 13, 2024

நெல்லையில் ஒரே நாளில் 238 வழக்குகள் பதிவு

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்படி, துணை ஆணையர்கள் ஆதர் பஷேரா, கீதா ஆகியோர் மேற்பார்வையில் நெல்லை மாநகரப் பகுதியில் நேற்று(ஜூலை 12) காலை முதல் இரவு வரை 26 இடங்களில் தொடர் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஆவணங்கள் சரியாக இல்லாமல் இயக்கியது, மது அருந்தி இயக்கியது, போக்குவரத்து விதி மீறல் உள்ளிட்ட 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

News July 13, 2024

செல்வப்பெருந்தகை பொம்மையை தொங்கவிட்டவர் கைது

image

தமிழகத்தில் பாஜக & காங்கிரசார் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே காங். தலைவர் செல்வப்பெருந்தகை உருவப் பொம்மையை மரத்தில் கட்டி தொங்கவிட்டனர். இது சர்ச்சையான நிலையில் வழக்கு பதிந்து விசாரித்த போலீசார் வி.கே.புரம் நகர பாஜக மகளிர் அணி செயலாளர் சந்திரகுமாரியின் கணவர் பாண்டி ராஜாவை நேற்று கைது செய்தனர், தொடர்ந்து பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

News July 12, 2024

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5 மணி வரை ) திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு

image

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி இன்று(ஜூலை 12) கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இன்று (ஜூலை 12) பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு பாளை., சாராள் தக்கர் பள்ளியில் நடக்கிறது. தகுதியான பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!