India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தச்சநல்லூர் மேக்கரையை சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர் மீது 5 கொலை வழக்கு, 12 கொலை முயற்சி உள்ளிட்ட 25 குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட அவரை போலீசார் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் பிடித்து கைது செய்தனர். துணை போலீஸ் கமிஷனர் கீதா பரிந்துரையின்படி போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின் படி மணிகண்டன் இன்று (மார்ச் 23) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் கடந்த இரண்டு நாளுக்கு முன்பு வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக சார்பில் ஜான்சிராணி போட்டியிடுவார் என அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 23) தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 70வது சீனியர் நேஷனல் ஆண்கள் கபாடி போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு மாநில அணியில், நெல்லை மாவட்டம் பணகுடியை சார்ந்த கபடி வீரர் ஹரிஹரன் தேர்வாகியுள்ளார். இதனை தொடர்ந்து கபடி வீரர் ஹரிஹரனுக்கு நெல்லையை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தெரியவந்த நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட கூடிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் மற்றும் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த ராபர்ட் புருஸ் என்பவர் போட்டியிடுவதாக இன்று (மார்ச் 23) தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதைதொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் கனிமொழியை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திமுக நெல்லை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா இன்று (மார்ச் 23) நேரில் சென்று தனது வாழ்த்தை தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணி குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவை தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து தயார் செய்யும் பணி நடைபெறுகிறது.
நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 தினங்களாக காலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இன்று (மார்ச் 23) காலை 7 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ராதாபுரம் வட்டாரத்தில் 10 மில்லி மீட்டர் மழையும், மாஞ்சோலையில் 16 மி.மீ. மழையும் பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 62.40 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திருநெல்வேலி எம்எல்ஏவாக உள்ள பாரதிய ஜனதா கட்சியின் நயினார் நாகேந்திரன் நெல்லை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து அவர் தனது தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறார். இன்று (மார்ச் 23) காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று மீண்டும் மோடி பிரதமராகவும் தமிழகத்தில் அதிக தொகுதியில் வெற்றி பெற வேண்டியும் தரிசனம் செய்தார்.
நெல்லை மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் அல்லது அசோக் ரூபி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.