India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து நேற்று பிற்பகலுக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் தொடா் சாரல் மழை பெய்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டனா். அடுத்த அறிவிப்பு வரும் வரை குளிக்கத் தடை தொடரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நெல்லையில் தற்போது நடைபெறுகிறது. மாநில அளவில் சில பாடங்களுக்கு 1500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதன் காரணமாக காலதாமதத்தை தவிர்க்க தினமும் ஒரு பாடத்திற்கு 300 ஆசிரியர்கள் வீதம் ஐந்து பாடத்திற்கும் மாநில அளவில் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படுவதாக கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் விதவைப் பெண்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று(ஜூலை 15) நடைபெற்றது. முஸ்லிம் மகளிர் உதவும் சங்க தலைவர் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு 133 முஸ்லிம் விதவைப் பெண்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கினார். செயலாளர் செய்யது அஹமது, உதவி தலைவர்கள் கபீர்,ஷாபி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் மாணவர்களுக்கு இடையே ஜாதி மோதல் 7 அரசு பள்ளிகளில் நடந்துள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், காவலர்கள் ஜாதி மோதலை கட்டுப்படுத்த மாணவர்களுக்கிடையே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜாதி மோதல் நடந்த ஏழு அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் என 250க்கும் மேற்பட்டோரை மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கடந்த சில நாட்களாக திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் 416 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பாளை தொகுதிக்கு உட்பட்ட நடுவக்குறிச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி, பாளை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ், நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ஊரகப் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை விரிவுபடுத்தி தமிழ்நாடு முதலமைச்சர், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலையில் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று காலையில், நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் “காமராஜர்” நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு சபாநாயகர் மு. அப்பாவு இத்திட்டத்தைதுவக்கி வைத்தார்.

நெல்லை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில், இன்று (ஜூலை 15) அதிகாலை 4 மணி முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை தற்போது வரை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை இன்று (ஜூலை 14) நெல்லையில் நேரில் சந்தித்தனர். அப்போது அவர்கள் அளித்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் 7 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் உட்பட 360க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை எந்த விசாரணையும் இன்றி கட்டாய பணி மாற்றம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரினர்.
Sorry, no posts matched your criteria.