India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல்-2024 வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (மார்ச் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தல் கால புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1950,18004258373 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறும். தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் தேதி தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்தன. இதனால் நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 16) தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 45 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, https://cra.tn.gov.in/-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (மார்ச் 16) மனு அனுப்பியுள்ளார்.அதில் 2016ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு கிடைக்காமல் போக்குவரத்து ஓய்வூதியர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். ஆகவே உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.