India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரி நான்கு வழிச்சாலை அருகே நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இன்று (மார்ச் 24) மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
நாகர்கோவில் கோவை எக்ஸ்பிரஸ் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில் சந்திப்பு பகுதியில் ரெட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக அநேக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன இந்நிலையில் நெல்லை வழியாக செல்லும் நாகர்கோவில் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மார்ச் 25) முதல் வரும் 27ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று இரவில் தெரிவித்துள்ளது.
கடந்த 10 மாதத்துக்கு முன்பு பிறந்த குழந்தை வசந்தியை பெற்றோர் வளர்க்க விருப்பம் இல்லாமல் குழந்தை நலக்குழுவில் ஒப்படைத்தனர். குழந்தை தொடர்பாக யாரேனும் உரிமை கோர விரும்பினால் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொக்கிரகுளம் திருநெல்வேலி என்ற முகவரியில் 30 நாட்களுக்குள் அணுகும்படி மாவட்ட ஆட்சியர் நேற்று (மார்ச் 24) தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் அனிதா. இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் வலதி என்பவர் 3 மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்தார். இதைக் கேட்டபோது அனிதாவை அவதூறாக பேசி மிரட்டினார். இதுகுறித்து அனிதா அளித்த புகாரின்படி தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வலதியை நேற்று (மார்ச் 24) கைது செய்தார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழ முன்னீர் பள்ளம் புது கிராமம் அருகே தாமிரபரணி ஆற்றில் அருகில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த சிறுவன் ஆற்றில் மூழ்கி விட்டதாக பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் இன்று (மார்ச் 24) வந்துள்ளது. இந்த தகவலின்பேரில் பாளையங்கோட்டை மீட்பு படையினர் விரைந்து சென்று சிறுவனை உடலை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தேடி மீட்டனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, நெல்லையில் சத்யா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் ஏழு தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச் 23) இரவு அறிவிக்கப்பட்டது. இதில் அதில், நெல்லை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில், நேற்று (மார்ச் 23) இரவு வரை கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். விடை கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முருங்கைகாய் விலை உச்சம் பெற்றது. ஒரு கிலோ 400 ரூபாய் வரை உயர்ந்தது. இந்த மாத தொடக்கத்திலிருந்து இதன் விலை சரிய தொடங்கியது. வேகமாக சரிந்து வந்த முருங்கைகாய் விலை இன்று (மார்ச் 24) ஒரு கிலோ 25 ரூபாய்க்கு பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக இன்று (மார்ச் 23) மாலை அறிவிக்கப்பட்ட ஜான்சி ராணி திசையன்விளை பேரூராட்சி தலைவராகவும் நெல்லைப் புறநகர் மாவட்ட இணை செயலாளராகவும் உள்ளார். இவர் பி.ஏ பட்டதாரி ஆவார். இவர் திசையன்விளையில் வசிக்கிறார். இவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.