India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 26) இரவு நெல்லை டவுன் வாகையடி முனையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்காக அவர் விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவரை நெல்லை அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவருக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நெல்லைக்கு வருகை தந்து வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து தனியார் தொலைக்காட்சியின் பிரச்சார பயண விழிப்புணர்வு வாகனத்தினை இன்று (மார்ச் 26) திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் கா.ப கார்த்திகேயன் தொடங்கிவைத்தார். மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கியது. திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று திடீரென சென்று ஆய்வு செய்தார். தேர்வு எழுதும் மாணவர் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் குறித்து தேர்வு மையப் பொறுப்பாளர்களிடம் விசாரித்தார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் துறையில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வரும் மாணவி மீனா. இந்த மாணவி அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் காசி விஸ்வநாதர் கோயிலில் சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளார். இந்த மாணவிக்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், கல்வெட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட சிபிஐஎம்எல் முடிவு செய்துள்ளது. நெல்லையில் உள்ள திமுக மத்திய மாவட்ட அலுவலகத்திற்கு நேற்று (மார்ச் 25) இரவில் சிபிஐ எம் எல் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், நிர்வாகிகள் சங்கரபாண்டியன், ரமேஷ் ஆகியோர் சென்று மாவட்ட செயலாளர் மைதீன் கானை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பிரச்சாரத்திலும் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவோம் என நெல்லையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லையில் பாஜக வேட்பாளர் நேற்று (மார்ச் 25) நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாஜகவில் நான் இருந்தாலும் எனக்கு அறிமுகம் கொடுத்தது அதிமுகதான் எனவே தேர்தல் சுவரொட்டிகளில் பிரதமர் மோடி எம்ஜிஆர் அண்ணாமலை போன்றவர்களின் படங்கள் இடம்பெறும் என்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நெல்லை மக்களவைத் தொகுதியில் நேற்று (மார்ச் 25) மட்டும் 6 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஏற்கனவே சுயேச்சை வேட்பாளர் கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் நெல்லை மக்களவைத் தொகுதியில் இதுவரை 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி டோல்கேட் அருகே நேற்று (மார்ச் 25) மாலை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அந்த வகையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். இதில் திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் என பலரும் கலந்துகொண்டனர்.
பிரபல தொழிலதிபரும் அரசியல்வாதியுமான ஹரி நாடார் இன்று (மார்ச் 26) காலை நெல்லைக்கு வருகை தருகின்றார். அவர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்புள்ள காமராஜர் சிலைக்கு காலை 9 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து கராத்தே செல்வின் நாடார் நினைவு இடத்தில் சென்று மலர் அஞ்சலி செலுத்தி செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.