Tirunelveli

News March 28, 2024

நெல்லை: மகிழ்ச்சியான செய்தி

image

நெல்லை தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் மீன்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த கணக்கெடுப்பு பணியின்போது பாபநாசம் பகுதியில் நீர் நாய்கள் காணப்பட்டது மகிழ்ச்சியான செய்தியாகும். இது போன்ற உயிரினங்கள்தான் தாமிரபரணியை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கின்றன என நெல்லையில் நேற்று (மார்ச் 27) மீன் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

News March 28, 2024

பாஜக வேட்பாளர் மனுவை நிராகரிக்க கோரிக்கை

image

நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வக்கீல் மகராஜன் செய்தியாளர்களை இன்று (மார்ச் 28) சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தனது வேட்பு மனுவில் 2023இல் தன் மீது உள்ள வழக்கை மறைத்து மனு தாக்கல் செய்ததாகவும், இதனால் அவருடைய வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு மனு தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளதாக கூறினார்.

News March 28, 2024

இரண்டு தொகுதியில் போட்டியிடும் பாதிரியார்

image

திருநெல்வேலி பாதிரியார் ஒருவர் பாராளுமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த பாதிரியார் காட்புரே நோபல் நெல்லை மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனை அடுத்து இன்று (மார்ச் 28) தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

News March 28, 2024

தமிழகத்தில் அதிமுக கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றும்

image

இல்லை தமிழில் நெல்லை பார்லிமென்ட் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று (மார்ச் 27) பேசினார். அப்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணியை இபிஎஸ் சிறப்பாக வழி நடத்துகிறார். நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற வகையில் ஜூன் 4-ஆம் தேதி 40 இடங்களையும் அதிமுக கூட்டணி கைப்பற்றும் என கூறினார்.

News March 28, 2024

நெல்லை: அடுத்த கட்ட முடிவு? இன்று அறிவிப்பு

image

நெல்லை பாராளுமன்ற முன்னாள் காங்கிரஸ் எம்பி ராமசுப்பு நேற்று (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் செய்தார், நேரம் ஆகிவிட்டதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை காலை 10 மணி அளவில் கொக்கிரகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ராமசுப்பு செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.

News March 27, 2024

முன்னாள் எம்பி வேட்பு மனு நிராகரிப்பு

image

திருநெல்வேலி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தொகுதி அதிகாரப்பூர்வ வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு எதிராக போட்டி வேட்பாளராக களம் இறங்க இன்று (மார்ச் 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‌வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டதாக கூறி அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

News March 27, 2024

நெல்லை தொகுதியில் 49 மனுக்கள் தாக்கல்

image

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் கடைசி நாளான இன்று 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் முதல் கடைசி நாளான இன்று வரை மொத்தம் 49 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டி வேட்பாளர்கள் மற்றும் டம்மி வேட்பாளர்கள் உட்பட 49 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் (மார்ச் 27) இன்று தெரிவித்தார்.

News March 27, 2024

காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிராக இருவர் போட்டி

image

நெல்லையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிராக கடைசி நேரத்தில் இருவர் இன்று (மார்ச் 27) வேட்பு மனு தாக்கல் செய்தனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் ப்ரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி ராமசுப்பு மற்றும் தேசிய நிர்வாகி வானமாமலை ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

News March 27, 2024

எதிர் எதிர் கட்சி நிர்வாகிகள் சங்கமிப்பு

image

நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா இல்ல நிகழ்ச்சி இன்று (மார்ச் 27) நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். மேலும், இதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனும் பங்கேற்றார். தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு எதிர் எதிர் கட்சிகளான அதிமுக, பாஜக நிர்வாகிகள் ஒரே மேடையில் சங்கமித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

News March 27, 2024

ஆட்டோவை தவிர்க்க காவல்துறை அறிவுரை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தினம்தோறும் பல்வேறு விபத்துக்கள் குறித்தும், சாலை விதிகள் விழிப்புணர்வு குறித்தும் அறிக்கை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோவை தவிர்த்திடுங்கள். உங்கள் குழந்தையின் உயிரை பணயம் வைக்காதீர்கள்” என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!