India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை அரசு போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குநர்கள் அனைத்து கண்டக்டர்கள் மற்றும் கிளை மேலாளர்களுக்கு நேற்று அனுப்பி உள்ள உத்தரவில் ஐந்து வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது, சந்தேகம் இருப்பின் அவரது பிறந்தநாள் சான்றிதழ் வாங்கி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி டவுண் கட்டாக் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மவ்லவி அல்ஹாபிழ் எம். ஜமால் முகைதீன் ஆலிம் இன்று (மே 13) அதிகாலை ஒரு மணியளவில் இயற்கை எய்தினார். இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு பேட்டை ரஹ்மானியா ஜமாஅத் பள்ளி கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவருடைய மறைவிற்கு ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் ஆலிம்கள் உலமாக்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தென்காசி எஸ்பி சுரேஷ்குமார் ஜெயக்குமாரின் தோட்டத்தில் வேலை செய்யும் ஒருவரிடம் நேற்று விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில் விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசாரும் விசாரணை நடத்தினர்.
நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி கூறுகையில், 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்வில் தவறிய, பள்ளிக்கு பாதியில் வராமல் சென்ற மாணவ மாணவிகளை வரவழைத்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அதனை தொடர்ந்து வரவிருக்கும் துணை தேர்வில் அவர்களை பங்கேற்க வைத்து படிப்பை தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும், இன்று முதல் அதற்கான வகுப்பு தொடங்கப்படும் என நேற்று தெரிவித்தார்.
தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று (மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு அரசு கல்வி உதவி தொகை 1000 ரூபாய் வழங்குகிறது. இதன் காரணமாகவும் குறைந்த கட்டணம் என்பதாலும் நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் பல அரசு கல்லூரிகளில் சேர்ந்து பயில ஆர்வம் காட்டியுள்ளனர். இதனால் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட அரசு கலைக் கல்லூரிகளில் மாணவிகள் விண்ணப்ப எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் KPKஜெயக்குமார் கடந்த 2-ம் தேதி தோப்பு விளைக்கு செல்வதற்காக இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 43 கிலோ மீட்டர் சுற்றி வந்துள்ளார். தனது வீட்டில் இருந்து கரைசுத்து புதூர் வழியாக தோப்பு விளைக்கு செல்வதற்கு வெறும் 15 கிலோ மீட்டர் தூரம் தான். ஆனால் 43 கிலோ மீட்டர் சுற்றி சென்று தோப்பு விளையை அடைந்துள்ளது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திரையரங்கிற்கு இன்று (மே 12) பிரபல இயக்குனர் வெற்றிமாறன் வருகை தந்தார். அவருக்கு திரையரங்கு உரிமையாளர்கள், அலுவலர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் ரசிகர்களுடன் பல்வேறு சினிமா அனுபவங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். இயக்குனரின் வருகையால் திரையரங்கில் விழாக்கோலம் பூண்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை கரைச்சுத்து புதூரில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் எரிந்து சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் இன்று (மே.12) தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று அங்கு டார்ச்லைட் கிடைக்கப் பெற்ற நிலையில் இன்று 10 பேர் கொண்ட தடவியல் துறை அதிகாரிகள் குழு அவர் பிணமாக மீட்கப்பட்ட பகுதியில் வேறு எதுவும் தடயங்கள் உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.
கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே பி கே ஜெயக்குமார் கடந்த 2-ம் தேதி அவரது சொந்த ஊரில் உள்ள ஒரு பேன்சி கடையில் டார்ச் லைட் வாங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட வீட்டிலிருந்து அந்த டார்ச் லைட் நேற்று (மே 11) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த டார்ச் லைட்டை தடவியல் நிபுணர்கள் குழுவினர் ஒரு முக்கிய தடயமாக கருதி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.