Tirunelveli

News March 26, 2024

10ஆம் வகுப்பு தேர்வு: நெல்லை கலெக்டர் திடீர் ஆய்வு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கியது. திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று திடீரென சென்று ஆய்வு செய்தார். தேர்வு எழுதும் மாணவர் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் குறித்து தேர்வு மையப் பொறுப்பாளர்களிடம் விசாரித்தார்.

News March 26, 2024

நெல்லை மாணவிக்கு குவியும் வாழ்த்து

image

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் துறையில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வரும் மாணவி மீனா. இந்த மாணவி அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் காசி விஸ்வநாதர் கோயிலில் சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளார். இந்த மாணவிக்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், கல்வெட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

News March 26, 2024

தேர்தல்: திமுக கூட்டணிக்கு ஆதரவு

image

இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட சிபிஐஎம்எல் முடிவு செய்துள்ளது. நெல்லையில் உள்ள திமுக மத்திய மாவட்ட அலுவலகத்திற்கு நேற்று (மார்ச் 25) இரவில் சிபிஐ எம் எல் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், நிர்வாகிகள் சங்கரபாண்டியன், ரமேஷ் ஆகியோர் சென்று மாவட்ட செயலாளர் மைதீன் கானை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பிரச்சாரத்திலும் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

News March 26, 2024

‘பிரச்சாரத்தில் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவோம்’

image

தேர்தல் பிரச்சாரத்தில் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவோம் என நெல்லையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லையில் பாஜக வேட்பாளர் நேற்று (மார்ச் 25) நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாஜகவில் நான் இருந்தாலும் எனக்கு அறிமுகம் கொடுத்தது அதிமுகதான் எனவே தேர்தல் சுவரொட்டிகளில் பிரதமர் மோடி எம்ஜிஆர் அண்ணாமலை போன்றவர்களின் படங்கள் இடம்பெறும் என்றார்.

News March 26, 2024

நெல்லையில் நேற்று மட்டும் 6 பேர் வேட்புமனு தாக்கல்

image

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நெல்லை மக்களவைத் தொகுதியில் நேற்று (மார்ச் 25) மட்டும் 6 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஏற்கனவே சுயேச்சை வேட்பாளர் கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் நெல்லை மக்களவைத் தொகுதியில் இதுவரை 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

News March 26, 2024

திருநெல்வேலி வேட்பாளரை அறிமுகம் செய்த முதல்வர்

image

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி டோல்கேட் அருகே நேற்று (மார்ச் 25) மாலை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அந்த வகையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். இதில் திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் என பலரும் கலந்துகொண்டனர்.

News March 26, 2024

நெல்லைக்கு இன்று வருகை தரும் பிரபலம்

image

பிரபல தொழிலதிபரும் அரசியல்வாதியுமான ஹரி நாடார் இன்று (மார்ச் 26) காலை நெல்லைக்கு வருகை தருகின்றார். அவர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்புள்ள காமராஜர் சிலைக்கு காலை 9 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து கராத்தே செல்வின் நாடார் நினைவு இடத்தில் சென்று மலர் அஞ்சலி செலுத்தி செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார்.

News March 25, 2024

காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குகள்..?

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றது . காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நியமிப்பதில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இன்று (மார்ச் 25) ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்பொழுது அவர் மீது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 25, 2024

நெல்லை: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பில் இழுப்பறி நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது ராப்ர்ட் புரூஸ் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாங்குநேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நெல்லை, கன்னியாகுமரி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2024

அதிமுக வேட்பாளர் நம்பிக்கையுடன் பேட்டி

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார். அவர் இன்று (மார்ச் 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில் புரட்சித்தலைவி அம்மாவின் திட்டங்களால் மாபெரும் வெற்றி பெறுவேன் என நம்பிக்கையுடன் கூறினார்.

error: Content is protected !!