Tirunelveli

News July 28, 2024

சிறப்பு நிபுணர் குழு – கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

image

புதிய தமிழக கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று, “மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வன உரிமை சட்டத்தை அமல்படுத்தினால் தான் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு எட்டப்படும். அதற்கான சிறப்பு நிபுணர் குழுவையும் தமிழக அரசு அமைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

News July 28, 2024

அம்பையில் ரயிலில் அடிபட்டவர் உயிரிழந்தார்

image

அம்பை அருகே மன்னார்கோவில் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (24) என்பவர் நேற்று அம்பை ரயில் நிலையத்தில் ரயில் ஏறும் போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவர் அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News July 28, 2024

புதிய செயலாளரை அறிவித்த ஒருங்கிணைப்பாளர்

image

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம், நேற்று திருநெல்வேலி மாநகர மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் செயலாளராக லெட்சுமி நாராயணனை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் புதிய செயலாளருக்கு சக நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 28, 2024

நெல்லை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கன மழை கொட்டி தீர்த்து வருகின்றனது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்லும்போது முன் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 27, 2024

நெல்லை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 27, 2024

நெல்லை போலீசார் எச்சரிக்கை

image

பொதுமக்கள் தங்களது அவசர தேவை என்று செல்போனுக்கு வரும் லிங்க் மூலம் தங்களது விவரங்களை வழங்கி போலி கடன் செயலிகளில் லோன் வாங்குவது உங்கள் வாழ்க்கையில் ஆபத்தை விளைவிக்கும். எனவே அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூலம் லோன் பெறாதீர்கள். ஒருவேளை நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது https://cybercrime.gov.in -ல் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 27, 2024

கண்காட்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

image

திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மைய கட்டிடத்தில் விவசாயிகள், உழவர்கள், கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள் உற்பத்தி பொருட்களின் தரங் கண்காட்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை பொது மேலாளர் (நபார்டு) ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News July 27, 2024

திருநெல்வேலி பாஜக எம்.எல்.ஏ இரங்கல் அறிக்கை

image

நீலகிரி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாஸ்டர் மதன் இன்று மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “பாஜகவின் முன்னாள் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் மாஸ்டர் மதன் மறைவு மிகவும் வருத்தத்தை அளிப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

News July 27, 2024

அணைகளுக்கு நீர்வரத்து கடுமையாக சரிவு

image

நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் காரையாறு அணைக்கு நீர்வரத்து ஆனது வினாடிக்கு 578.46 கன அடியாக குறைந்துள்ளது, மேலும், 118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 24 கன அடி ஆகவும், 52 அடி முழு கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணைக்கு வினாடிக்கு 8 கன அடியாக நீர்வரத்து கடுமையாக சரிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

News July 27, 2024

நெல்லையில் இன்று தரங் மேளா கண்காட்சி

image

திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் NABARD, SFAC & ONDC ஆகியவை இணைந்து நடத்தும் தரங் மேளா கண்காட்சி இன்று(ஜூலை 27) நடைபெற உள்ளது. 10 மணிக்கு நடைபெறும் இந்த கண்காட்சியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைக்க உள்ளார். இதில் பொதுமக்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற உள்ளனர்.

error: Content is protected !!