Tirunelveli

News March 18, 2024

திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் போட்டி 

image

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே 10 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் ஞானதிரவியம் வெற்றிபெற்றார்.

News March 18, 2024

திருநெல்வேலியில் தமிழிசை போட்டி?

image

புதுச்சேரி துணை நிலை ஆளுநர், தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். விலகல் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். இவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு கனிமொழியிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2024

நெல்லை: அரசியல் கட்சிகளே உஷார்

image

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் ஊடகங்களில் வரும் செய்திகள் கண்காணிக்கப்படுகிறது. இந்த செய்திகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் மீது புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

News March 18, 2024

நெல்லை மாவட்ட காவல்துறை முக்கிய அறிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று மாலை விடுத்துள்ள அறிவிப்பில், தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் குறுஞ்செய்திகள் வழியாகவோ சமூக ஊடகங்கள் வழியாகவோ பரப்பினால் 24 மணி நேரமும் செயல்படும் காவல்துறை கைபேசி எண் 9498101765 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

News March 17, 2024

தேர்தல் ஆணையத்திற்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

image

பாராளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மார்ச் 17) வெளியிட்டுள்ள அறிக்கையில், 19, 26 தேதிகள் வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்று இஸ்லாமியர்கள் ஜும்மா தொழுகை மேற்கொள்வார்கள். எனவே அன்றைய தேதியை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.

News March 17, 2024

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய தகவல்

image

நெல்லை மாவட்டத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். இந்நிலையில், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படமாட்டாது என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 17) தெரிவித்தார்.

News March 17, 2024

அறிவிப்பு: 15 துணை கலெக்டர்கள் அதிரடி மாற்றம்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் இடமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் உள்பட 15 துணைக் கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வருவாய் துறை செயலாளர் ராஜா ராமன் பிறப்பித்துள்ளார். நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துகிருஷ்ணன் மதுரை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News March 17, 2024

நெல்லை:எம்எல்ஏ அலுவலகம் மூடல்

image

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.

News March 16, 2024

நெல்லை: 16.50 லட்சம் வாக்காளர்கள்

image

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய
ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. தொகுதியில் மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 44 ஆயிரத்து 284 பெண் வாக்காளர்களும், 152 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம்16 லட்சத்து 50 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாறு கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

News March 16, 2024

தேர்தல் கால புகார் எண் வெளியிட்ட மாவட்ட காவல்துறை

image

மக்களவைத் தேர்தல்-2024 வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (மார்ச் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தல் கால புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1950,18004258373 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!