India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் மகேஷ் சுப்ரமணியன் கூறியதாவது, தொழிற்பயிற்சிக்கு 8,10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் மேல்நிலைப் படிப்பு, பட்டைய படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இடைநின்ற மாணவர்கள் மாணவிகள் அனைவரும் நேரில் அல்லது இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் 7ம் தேதி கடைசி நாள் என நேற்று கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைந்துள்ளது. தொடர்ந்து மாலை இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று(மே 18) அதிகாலை சில இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக நெல்லை – தென்காசி சாலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் சென்றன.
பாளை., கேடிசி நகரை சேர்ந்த வாலிபரின் செல்போன் எண்ணிற்கு கடந்த பிப்.21ம் தேதி SMS லிங்க் வந்துள்ளது. அதில் இருந்த லிங்கை அவர் கிளிக் செய்தபோது தேசிய வங்கியின் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம் என ஆசை வார்த்தை தெரிவிக்கப்பட்டது. அந்த இணையதளத்தில் வாலிபர் தனது அக்கவுண்ட் நம்பர், யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்தவுடன் அவரது அக்கவுண்டில் இருந்து ரூ.2 லட்சம் திருடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழையும் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இடி, மின்னலுடன் மழை பெய்வதால் பொதுமக்கள் மின்கம்பங்கள் அருகே செல்ல வேண்டாம். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என நெல்லை மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கான விளக்க அறிவிப்புகளை சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகிறது.
வீட்டிலேயே மொபைல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் மூலம் யோகா பயிற்சி வீடியோவை பார்த்து மேற்கொள்வதற்கான வசதியை திருநெல்வேலி அரசு சித்த மருத்துவ கல்லூரி அறிமுகம் செய்துள்ளது. இதற்காக கல்லூரியில் “QR code” வழங்கப்படுகிறது. இதை ஒரு முறை ஸ்கேன் செய்து செல்போனில் பதிவேற்றம் செய்தால் இதன் மூலம் பார்த்து யோகா பயிற்சியை மேற்கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் மே 18 மற்றும் 19ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (மே 17) சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு தமிழ்நாடு காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினர் ஒரு ஆய்வாளர் தலைமையில் 90 காவலர்கள் வந்தனர். பேரிடர் மீட்பு பணிகளுக்காக அவர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் வாக்கு எண்ணுவதற்கு 18 நாட்களே உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி இன்று (மே 17) ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடம் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை திருநெல்வேலியில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருநெல்வேலியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.