Tirunelveli

News April 9, 2024

திருநெல்வேலி: ஐ.லியோனி திட்டவட்டம்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு களக்காடு அண்ணா சிலை முன்பு நேற்று பட்டிமன்ற பேச்சாளர் ஐ.லியோனி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மத்தியில் I.N.D.I.A. கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என கூறினார். இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News April 9, 2024

பாஜக வேட்பாளருக்கு ஜான்பாண்டியன் பிரச்சாரம்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர் நேற்று (ஏப்ரல் 8) இரவு மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது இவருக்கு ஆதரவாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவரும், தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஜான்பாண்டியன் பிரச்சாரம் செய்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

News April 9, 2024

ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை

image

மக்களவைப் பொதுத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நெல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுவருகின்றன. கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டதை தொடர்ந்து முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்படுகிறது. நேற்று (ஏப்ரல் 8 ) வள்ளியூர் ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

News April 9, 2024

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடுகள்

image

நெல்லை பார்லிமென்ட் தேர்தல் ஓட்டுப் பதிவு வரும் 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை வரும் மே மாதம் 4ம் தேதி பாளையங்கோட்டை அரசு என்ஜினியரிங் கல்லூரியில் நடத்தப்படுகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஓட்டு பதிவு இயந்திரங்களை வைக்க அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 9, 2024

“லிப்ட்” தருவதாக கூறி ஹெல்மெட்டால் தாக்குதல்

image

சமாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஹரி கிருஷ்ணன்(21). இவர் வீரப்பன் காலனி அருகே சென்றபோது மனோஜ் (27) , திருமலை கொழுந்துபுரம் மகாராஜா (20) ஆகியோர் தங்களது இருசக்கர வாகனத்தில் லிப்ட் தருவதாக ஏற்றி மாற்று பாதையில் அழைத்துச் சென்றனர். இதை தட்டி கேட்ட அரிகிருஷ்ணனை இருவரும் ஹெல்மெட்டால் சரமாரி தாக்கினர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து மனோஜ், மகாராஜாவை இன்று (ஏப்ரல் 8) கைது செய்தனர்.

News April 8, 2024

நெல்லை: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

நெல்லை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 8, 2024

அரசு பஸ்களில் சமரச மைய விழிப்புணர் ஸ்டிக்கர்

image

சமரச மையங்கள் மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் நீதிமன்ற நிலுவை வழக்கு பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று (ஏப்ரல் 8) முதல் 12ம் தேதி வரை சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஸ்டிக்கரை அரசு பஸ்ஸில் மட்டும் நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சமீனா இன்று தொடங்கி வைத்தார். நீதிபதிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

News April 8, 2024

பாஜக வேட்பாளருக்கு இன்று உற்சாக வரவேற்பு

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 8) மானூர் வட்டாரம் தாழையூத்து மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அங்கு அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தலைப்பாகை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News April 8, 2024

நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை

image

திருநெல்வேலி மாவட்டம் நொச்சிகுளம் கலையரங்கம் அருகில் இன்று (ஏப்.8) அன்பு (32) என்ற இளைஞரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 8, 2024

தேர்தல் அதிரடி: நெல்லையில் ரவுடிகள் கைது

image

மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி டவுன் சரக உதவி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பேட்டை டவுன் பகுதியை சேர்ந்த 7 ரவுடிகளை கடந்த ஒரு வாரத்தில் கைது செய்தனர். நன்னடத்தை விதியை மீறும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!