India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு தமிழக முதல்வருக்கு இன்று (மே 20) கடிதம் அனுப்பி உள்ளார். அதில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராதாபுரம் கால்வாய் மூலம் பாசன பெறும் 52 குளங்களும் முழுமையாக நிரம்பும் வரையில் தினமும் 150 கன அடி வீதம் ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலி டவுன் பள்ளிவாசல் ஜமாத் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ஷாகுல் ஹமீது இன்று மரணம் அடைந்தார். அவரின் மறைவிற்கு முன்னாள் தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான மைதீன்கான் இன்று (மே 20) இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
பாளையங்கோட்டையில் நடந்த கொலை வழக்கில் போலீசார் இருவரை கைது செய்து தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர். சாந்தி நகர் மணிக்கூண்டு அருகே இசக்கிமுத்து என்பவர் சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் இன்று (மே 20) குறிச்சியை சேர்ந்த மணிகண்டன், கார்த்திகேயன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் பிரபல ரவுடி கொக்கி குமார் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.
நெல்லை மாநகர டவுன் பள்ளிவாசல் ஜமாத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ஷாகுல் ஹமீத் இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி இன்று (மே 20) இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவரை இழந்து வாடும் ஜமாத்தினருக்கும் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பிரதான அணைகளின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.30 அடி,156 உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 62.86 அடி,118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.40 அடி காணப்படுவதாக மாவட்ட நிர்வாகம் இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளது.
நெல்லையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். வரும் ஜூன் 24ல் தமிழ்நாடு முழுவதும் இப்போராட்டம் நடக்க உள்ள நிலையில் அன்றைய தினம் நெல்லை மாவட்டத்தில் அரசு பேருந்துகள் ஓடுமா? என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத ரயில் பயணச்சீட்டு பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க மொபைல் போன் மூலம் பயணச்சீட்டு பெரும் வசதி மதுரை கோட்ட ரயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது என தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து அரசுகலைக் கல்லூரிகளிலும் புதிய கல்வி ஆண்டில் இளங்கலை பாடப்பிரிவில் சேர்ந்து பயில்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வாய்ப்பு இன்றுடன் (மே 20) நிறைவுபெறுகிறது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்தால் மாணவ, மாணவிகள் இன்றைய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீனியர் மாணவர்கள் ராக்கி செய்ததாக கடந்த வாரம் புகார் எழுந்தது. துணை வார்டன் டாக்டர் கண்ணன் பாபு கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இரு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்கள் சிலரின் விடுதி அறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று (மே 19) இரவு ஒரு சில இடங்களில் கன மற்றும் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும்,தொடர்புக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரை அமைக்குமாறு அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.