Tirunelveli

News April 11, 2024

கொலை வழக்கில் சிக்கிய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

பெருமாள்குளம் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் ஜெயக்குமார் (22) என்பவர் கடந்த மார்ச் 15ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் ராஜா (34), பிரைட்சன் ( 24), டார்லின் அருமை குமார் (23) ஆகிய 3 பேரையும் எஸ் பி சிலம்பரசன் வேண்டுதலின்படி கலெக்டர் உத்தரவை அடுத்து இன்று (ஏப்ரல் 11) களக்காடு போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.

News April 11, 2024

தேர்தல் பாதுகாப்பு பணி ஆலோசனை கூட்டம்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளது
தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்ரல் 11) நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். எஸ்பி சிலம்பரசன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா முன்னிலை வகித்தனர். காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரின் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

News April 11, 2024

ராகுல் பொதுக்கூட்டம் பாதுகாப்பு ஒத்திகை

image

நெல்லையில் நாளை ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்வதை ஒட்டி இன்று (ஏப். 11) பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் நாளை பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதை ஒட்டி இன்று அங்கு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இதில் ஏராளமான பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.

News April 11, 2024

நெல்லை: ரூ17.8 லட்சத்துடன் 2.25 கிலோ தங்கம் பறிமுதல்

image

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் வருமானவரித் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர். அதில் நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்.10) வரை நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பல நபர்கள் வைத்திருந்த 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், 2,250 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயன் இன்று (ஏப்.11) தெரிவித்துள்ளார்.

News April 11, 2024

ரம்ஜான் பண்டிகை: முஸ்லிம் மக்கள் உற்சாகம்

image

நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் இன்று (ஏப்.11) ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகையும் நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர். புத்தாடை அணிந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டதையும் காண முடிந்தது.

News April 11, 2024

திமுகவினருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பதில்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் வீட்டில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திமுகவினர் அளித்த புகாருக்கு திருநெல்வேலி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் நேற்று (ஏப்.10) பதில் அளித்துள்ளார். அதில், பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது என தெரிவித்துள்ளார்.

News April 11, 2024

மோடி நெல்லை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக வரும் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையிலான காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

News April 11, 2024

நெல்லை: தேவர் படத்திற்கு எம்எல்ஏ மரியாதை

image

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் படத்திற்கு எம்எல்ஏ மரியாதை செலுத்தினார். நெல்லை பாராளுமன்ற தேர்தலில் காங். வேட்பாளர் ஆதரித்து ரூபி மனோகரன் எம்எல்ஏ களக்காடு பகுதியில் நேற்று (ஏப். 10) இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது வடுகச்சிமதில் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் படத்திற்கு அவர் மரியாதை செலுத்தினார். அதில் அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 10, 2024

நாளை ரம்ஜான் தொழுகை நடைபெறும் இடம்

image

நாளை 11.4.2024 வியாழக்கிழமை காலை 7.15 மணி அளவில் மேலப்பாளையம் பஜார் திடலில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை IPP சார்பில் பெருநாள் தொழுகை நடைபெறும்
பெண்களுக்கு தனியிட வசதி உண்டு என இஸ்லாமிய பிரச்சார பேரவையினர் அறிவித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகைக்காக மைதானத்தை தயார்படுத்தும் பணி இன்று (ஏப்ரல் 10 ) இரவு நடைபெற்றது.

News April 10, 2024

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை நெல்லை வருகை

image

விளையாட்டுதுறை
அமைச்சரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை 6 மணியளவில் நெல்லை சந்தை ரவுண்டானாவில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர் ராபர்ட்புரூஸ் -க்கு “கை” சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வருகை தர உள்ளார். கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள், மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் இன்று (ஏப்.,10) அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!