Tirunelveli

News August 2, 2024

நெல்லை மாவட்டத்தை கண்காணிக்க ஆணை

image

வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களை கண்காணிக்கவும் , மழை நேரங்களில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News August 2, 2024

நெல்லையில் இரவு 7 மணி வரை மழை

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் வறண்ட வானிலை காணப்பட்டாலும், பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 2, 2024

நெல்லைக்கு மேலும் ஒரு சிறப்பு இரயில்

image

ரயில் எண்(06005) சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு வழி சிறப்பு விரைவாக இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயிலானது அடுத்த நாள் காலை 11 மணிக்கு நாகர்கோயில் சென்று சேருகிறது. இந்த ரயில் எழும்பூர், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி வழியாக நாகர்கோயில் சென்று சேருகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

News August 2, 2024

நெல்லையில் பள்ளி மாணவரை வெட்டிய சக மாணவர்

image

நெல்லை மாவட்டம் நாங்குநேரி கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று(ஆக.02) 9ம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவரை அரிவாளால் வெட்டியுள்ளார். காயம் அடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயநாராயணம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 2, 2024

நெல்லை மாவட்ட அணைகளின் நீர் வரத்து நிலவரம்

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர் வரத்து. காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 120.60 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.77 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 129.49 அடியாகவும் உள்ளது பாபநாசம்உள்ளது.பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1041 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை.

News August 2, 2024

நெல்லை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் திடீர் மாற்றம்

image

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் திருச்சி மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சரவணன் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் தமிழகத்தில் 17 திட்ட இயக்குநர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

News August 2, 2024

சொரிமுத்தையனார் கோயில்: தனியார் வாகனங்களுக்கு அனுமதி

image

காரையார் சொரிமுத்தையனார் கோயிலில் நடைபெற்ற தூய்மை பணிகள் காரணமாக இரண்டு நாட்கள் பாபநாசம் வன சோதனை சாவடியில் இருந்து கோயிலுக்கு பக்தர்கள், பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று(ஆக.02) ஒருநாள் மட்டும் தனியார் வாகனங்களில் பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல கட்டுப்பாடுகளுடன் வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

News August 1, 2024

குடில்கள் அமைக்க கோவிலை அணுகவும்

image

அம்பை சொரிமுத்து அய்யனார் கோவிலில் வருகிற 4 ஆம் தேதி ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடஉள்ளது. இதற்காக பக்தர்கள் தங்கும் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் வளாகப் பகுதியில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, தனி நபரிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். கோவில் நிர்வாகத்தை அணுகி குடில்கள் பதிவு செய்து சொல்லலாம் என இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 1, 2024

நெல்லை டூ மேட்டுப்பாளையம் ரயில் நீட்டிப்பு

image

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்பட்டு வரும் நெல்லை டூ மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. அம்பை, தென்காசி, சிவகாசி ஆகிய வழிகள் மூலம் இயக்கப்படும் இந்த ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 1, 2024

மாஞ்சோலையை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது

image

மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மாஞ்சோலையை சேர்ந்தவர்கள் அளித்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மாஞ்சோலையை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மாஞ்சோலையை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது என டேன் டீ நிர்வாகமும் இன்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!