India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டன. மேலும் மீட்பு படைகளும் வரவழைக்கப்பட்டன. நேற்று மாவட்ட பகுதிகளில் கனமழை இல்லை. இதனால் ரெட் அலர்ட் நீங்கியது. இருப்பினும் மஞ்சள் அலர்ட் தொடர்கிறது.
பாளையங்கோட்டை அன்பு நகர் மேம்பாலம் திறக்கப்பட்ட பின் கீழ் பகுதியில் உள்ள ரயில்வே கேட் முழுமையாக மூடப்பட்டது. அங்கு சுரங்கப்பாதை பணி தொடங்கப்படாத நிலையில் பாதசாரிகள் செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களுக்கு அனுமதிக்காக முறையிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று (மே 20) இரவு முதல் இந்த பாதையில் இருசக்கர வாகன ஓட்டிகளும் கடந்து செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளது.
பாளையங்கோட்டை கேடிசி நகரில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் பாண்டியன் 6 பேர் கொண்ட கும்பலால் இன்று (மே.20) வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்கள் கேடிசி நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் பதட்டம் நிலவுகிறது.
நெல்லை மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து தோவாளை கால்வாய் வழியாக ராதாபுரம் கால்வாய் மூலம் 16,000 ஏக்கர் பாசனம் மற்றும் 52 குளங்கள் நீர் பாசனம் பெறுகின்றன. தற்போது ராதாபுரம் கால்வாயில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு முதல்வருக்கு இன்று கோரிக்கை வைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நெல்லை மாவட்டம் கே.டி.சி நகரில் உள்ள தனியார் ஓட்டல் முன்பு இன்று இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் பெயர் தீபக் ராஜன் என்பதும் அவர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் கொலை செய்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர் இங்கு போதுமான அளவு டிக்கெட் கவுண்டர்கள் இல்லை. அதனால் ரயில் வரக்கூடிய சமயத்தில் கவுண்டரில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்கின்றனர். அதனால் கூடுதல் கவுண்டர்கள் திறக்க வேண்டும் என்பது பயணிகளின் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் இன்பதுரை இன்று (மே 20) தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், வள்ளியூர் வழியே செல்லும் அனைத்து அரசு புறநகர் பேருந்துகளும் வள்ளியூருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக செல்லும் மர்மம் என்ன? ராதாபுரம் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற ஒருவர் இருக்கிறாரா? இல்லையா? என சபாநாயகர் அப்பாவுவை குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி அறிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று (மே 20) நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் கைப்பேசிக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை சார்பில் திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம் என குறுஞ்செய்தி வந்ததால் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இன்று (மே 20) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நேற்று இரவு வள்ளியூருக்கு போகாது எனக் கூறி பயணியிடம் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் வாக்குவாதம் செய்து பேருந்தை அங்கேயே நிறுத்தினர். இது குறித்த புகாரின்பேரில் நாகர்கோவில் போக்குவரத்துக் கழக மேலாளர் அந்த ஓட்டுநர் நடத்துநரை பணியிட நீக்கம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.