India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவருடைய முழு உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நெஇந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் நரிக்குறவர் இன மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இன்று (ஏப்.14) தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இனிப்பு வழங்கி வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.
நெல்லையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஏப்.14) காலை 11 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்க பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் நேற்று (ஏப்.13) அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட மணி மூர்த்தீஸ்வரர் உச்சிஷ்ட கணபதி திருக்கோவிலில் நிர்வாகம் இன்று (ஏப்.13) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை காலை 6 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழும் நிகழ்வு நடைபெற இருககிறது . முன்னதாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 5 மணிக்கு நடைபெறும் இன்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அகஸ்தியர்பட்டி மைதானத்தில் வரும் 15ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தொடர்பாக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வருகிறார்.தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏப்ரல் 14,15 ஆகிய 2 தேதிகளில் அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டி பகுதியை சுற்றியுள்ள சுமார் 5 கி.மீ சுற்றளவிற்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் எஸ்பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று நெல்லையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திக்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. காக்காச்சி, மாஞ்சோலை, ஊத்து, அம்பாசமுத்திரம் பகுதியில் 3 செ.மீட்டரும், ராதாபுரம், நாலுமுக்கு, பாபநாசம், கன்னடியன் கால்வாய், களக்காடு பகுதியில் 2 செ.மீட்டரும், மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணை, சேரன்மகாதேவி பகுதியில் 1 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக நெல்லையில் திமுகவினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சாரத்தின் போது திமுக கொடி மட்டுமே கட்சியினர் ஏந்தி சென்று காங்கிரஸ் கட்சி கொடியை புறக்கணித்து வருகின்றனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் இன்று (ஏப்.13) நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்பொழுது அங்குள்ள முதியவர் ஒருவரை ஆரத் தழுவி தங்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் வெற்றி பெற்ற பின்பு நிறைவேற்றி தருவதாக நயினார் நாகேந்திரன் வாக்குறுதி அளித்தார்.
Sorry, no posts matched your criteria.