Tirunelveli

News May 21, 2024

நெல்லையில் 64.60 மில்லி மீட்டர் மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதை முன்னிட்டு இன்று(மே 21) காலை நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 64.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 21, 2024

நெல்லை – பெங்களூர் சிறப்பு ரயில் இயக்கம்

image

மே 22ம் தேதி முதல் ஜூன் மாதம் 13 தேதி வரை திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக யலஹங்கா (பெங்களூரு) வரை சிறப்பு இரயில் திருநெல்வேலி – யலஹங்கா (பெங்களூர்) புதன் கிழமையும், யலஹங்கா (பெங்களூர்) – திருநெல்வேலி – வியாழன் கிழமையும் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

News May 21, 2024

பிரதான அணைகளின் நீர்மட்ட நிலவரம்

image

நெல்லை மாவட்டம் பிரதான அணைகளின் நீர்மட்ட நிலவரம் இன்று காலை 143 அடி உச்சநீர் மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.10 அடி,156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 63.81 அடியாக உள்ளது.118 அடி உச்சநீர் மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.20 அடியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது.

News May 21, 2024

அதிகபட்சமாக நாலுமூக்கு பகுதியில் 11 மிமீ மழை

image

நெல்லை மாவட்டத்தில் நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் அம்பை, சேரன்மகாதேவி, மணிமுத்தாறு, பாபநாசம், ராதாபுரம், களக்காடு, மாஞ்சோலை, காக்காச்சி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நாலு மூக்கு பகுதியில் 11 மில்லிமீட்டர் மழையும், ஊத்து பகுதியில் 10 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக இன்று காலை மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News May 21, 2024

நீதிமன்றத்தில் போலீசார் குவிந்ததால் பரபரப்பு

image

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஏராளமான போலீசார் குவிந்தனர். கேடிசி நகரில் ரவுடி தீபக்ராஜா நேற்று மதியம் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (மே 21) கொலையாளிகள் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராகலாம் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நீதிமன்றம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நீதிமன்றத்திற்கு ஆஜராக வரும்போது கொலையாளிகளை கைது செய்து விடலாம் என காவல்துறை திட்டமிட்டதாக தெரிகிறது.

News May 21, 2024

கொலையாளிகளை நெருங்கும் தனிப்படை

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று தீபக் ராஜா (34) என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டப் பகலில் நடந்த இந்த கொடூர கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தேடி வரும் நிலையில் இன்று (மே 21) போலீசார் கொலையாளிகளை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

News May 21, 2024

நெல்லையில் ரெட் அலர்ட் வாபஸ்

image

தமிழகத்தில் தென் தமிழக கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்றும், நாளையும் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் இன்று காலை தெரிவித்துள்ளது.

News May 21, 2024

நெல்லை: ரயில் அடிபட்டு முதியவர் பலி

image

நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் பேட்டை எம்ஜிஆர் நகர் ஜெகஜீவன் தெருவில் வசித்துவரும் தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். சரிவர காது கேட்காத சண்முகம் நேற்று (மே 20) மாலை பஜாருக்கு செல்வதற்காக ரயில்வே தண்டவளத்தை கடந்தபோது, செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்குச் சென்றுகொண்டிருந்த அதிவேக ரயில் அவர் மீது மோதியதில் அவர் பலியானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 21, 2024

மாவட்ட செயலாளரிடம் சீட்டு பெற்ற ஒன்றிய தலைவர்

image

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா வருகின்ற ஜூன் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு மற்றும் திமுக பவள விழா ஆண்டு உறுப்பினர் உரிமை சீட்டுகளில் இரண்டாவது கட்டமாக வந்துள்ள உறுப்பினர் சீட்டுகளை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பனிடமிருந்து வள்ளியூர் ஒன்றிய தலைவர் ராஜா ஞானதிரவியம் இன்று (மே 21) பெற்று கொண்டார்.

News May 21, 2024

உபிக்கு சென்ற நெல்லை பாஜக வேட்பாளர்

image

தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் உட்பட பாஜக நிர்வாகிகள் சிலர் உத்திரபிரதேச மாநிலத்திற்கு நேற்று (மே 20) சென்றனர். அங்கு அவர்களுக்கு அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தமிழக பாஜக நிர்வாகிகள் உத்திரபிரதேசத்தில் தங்கி இருந்து பாஜக வெற்றிக்கு தேர்தல் பணியாற்ற உள்ளனர்.

error: Content is protected !!