India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்.17) காலை வரை மாவட்டம் முழுவதிலும் மொத்தமாக 16 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று (ஏப்.17) காலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நெல்லை தொகுதி ஆலங்குளத்திற்கு நேற்று (ஏப். 16) இரவு வந்த சரத்குமார், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அவர் பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளாக மோடி நல்லாட்சி நடத்தி வருகிறார். பொருளாதார அடிப்படையில் 16வது இடத்தில் இருந்த இந்தியாவை 5ஆம் இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். இன்னும் 20 ஆண்டுகள் அவர் பிரதமாராக இருந்தால் முதலிடத்திற்கு கொண்டு வருவார் என்றார்.
பார்லி., தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இறுதி கட்ட பிரசாரம் விறுவிறுப்பு அடைந்த நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சார செய்யும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுதினம் (ஏப்ரல் 19) வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் நேற்று பிற்பகல் முதலே தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். பிரச்சார களத்தில் நெல்லை ஊடகவியலாளர்கள், ஒரே நேரத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளை ஓடி ஓடி சென்று செய்தி சேகரிக்கின்றனர்.
சென்னையிலிருந்து நெல்லை வழியாக தென்காசிக்கு கோடைகால ரயில் அறிவிக்கப்படாதது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கோடைகால சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வேயில் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வரும் நெல்லையில் கிளை வழித்தடங்களான குறிப்பாக சென்னை – திருநெல்வேலி – தென்காசி இடையே ரயில்கள் ஏதும் அறிவிக்கப்படாதது பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் மது கடைகள் இன்று (ஏப்.17) முதல் மூன்று நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பலரும் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை நேற்று இரவே வாங்கிவிட்டு சென்றனர். வாக்கு பதிவு முடிந்து இனி 20ஆம் தேதிதான் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும்.
நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமையா என்பவரது மகன் இசக்கி (25). இவர் அப்பகுதியில் சலூன் கடைநடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம், கொலையாளிகள் விவரம் குறித்து அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விநாயகா சட்ட கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த வருடத்திற்கான ஸ்காலர்ஷிப் தேர்வில் நெல்லையைச் சேர்ந்த மாணவி வினிஸ்டா 100% தேர்ச்சி பெற்று முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாணவிக்கு சட்டம் படிப்பதற்கான அனைத்து உதவிகளும் ஸ்காலர்ஷிப் மூலம் வழங்குவதற்கான ஆணைகளை கல்லூரி டீன் அனந்த பத்மநாபன் நேற்று (ஏப்ரல் 16) வண்ணாரப்பேட்டை தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட கல்குவாரி சங்கத் தலைவர் ரிச்சர்ட் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று (ஏப்.16) சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து கல்குவாரி சங்க தலைவர் ரிச்சர்ட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் எனது வீட்டில் பணம் மற்றும் சான்றிதழ்கள் எதுவும் கைப்பற்றவில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இன்று மாலை 7 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.