India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அனைவரும் மறக்காமல் நாளை வாக்கு செலுத்துவோம். உங்கள் தொகுதியில் யார் யார் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது அறப்போர் செயலியையோ அல்லது கீழ்காணும் அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். Tirunelveli / திருநெல்வேலி – https://www.youtube.com/watch?v=HPJgwBJWcJM
நெல்லை டவுன் தாலுகா அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (ஏப்ரல் 18) நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பணியின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் நவீன துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து ஓட்டு சாவடிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதனை முன்னிட்டு நெல்லை, பாளை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்தும் சோதனை நடந்துவருகிறது. முக்கிய இடங்களில் உள் மாவட்ட போலீசார், வெளிமாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் தேர்தலில் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுப்பதற்காக பறக்கும் படையினர், வருமானவரித் துறையினர் போன்ற குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதுவரை ரூ.2.62 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்களையும், மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேற்கண்ட தகவல் இன்று (ஏப்.18) காலை தெரிவிக்கப்பட்டது.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நாளை 1,810 ஓட்டு சாவடிகளில் ஓட்டு பதிவு நடக்கிறது. இதற்காக தேவையான பொருட்களை கொண்டு செல்லும் வழியில் அந்தந்த சட்டசபை தொகுதி தலைமை அலுவலங்களில் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், அடிப்படை பொருட்கள் அனைத்தும் இன்று (ஏப்.18) காலை முதல் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன.
தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்ற நிலையில் நாளை அனைத்து ஓட்டு சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. வரும் ஜூன் மாதம் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பாளை அரசு இன்ஜினியரிங் கல்லூரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லை, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை வசதி குறித்து இன்று (ஏப்.18) அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மக்களவைத் தொகுதியில் 1,197 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், கூடுதலாக பாதுகாப்பு படையினரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்றைய தின (ஏப்.18) நிலவரப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், நெல்லை கலெக்டருமான கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் நாளான நாளை வாக்குச்சாவடிகளுக்கு 200 கிலோமீட்டர் தொலைவுக்கு பிறகு தேர்தல் ஆணைய விதிகளுக்குட்பட்டு சிறு குடில்கள் அமைக்க முன் அனுமதி பெற வேண்டும். குற்றப் பின்னணி உள்ள நபர்கள் பூத் ஏஜெண்டாக நியமிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
சமாதானபுரம் உப மின் நிலைய பகுதி வி எம் சத்திரம் அலுவலகத்திற்கு உட்பட்ட நெல்லை தூத்துக்குடி சாலையில் உள்ள மின் கம்பம் அருகே இன்று (ஏப்ரல் 17) காலை மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது சரிந்து விழுந்தன. இதனால் மின் வினியோக பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மின் தடை செய்து மரக்கிளைகளை அகற்றி தடையற்ற மின் விநியோகம் வழங்க ஏற்பாடு செய்தனர்.
திருநெல்வேலி தொகுதியில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மின்வாரிய உயர் அதிகாரி உத்தரவுப்படி நெல்லை, பேட்டை, பழையப்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அவசர தேவைக்கு மின்வாரிய அதிகாரிகள், அலுவலர்கள், தொலைபேசி தொடர்பு எண்களை ஒட்டும் பணியை இன்று (ஏப்.17) மின்வாரிய ஊழியர்கள் மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.