Tirunelveli

News August 8, 2024

50 காவல் பணியாளர்களுக்கு பாராட்டு சான்று

image

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் எதிரிகளை கண்டுபிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்த காவல்துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு இன்று (ஆகஸ்ட் 8) எஸ்பி அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. எஸ்பி சிலம்பரசன் பாராட்டு சான்று வழங்கி அவர்களை கௌரவித்தார். நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 8, 2024

இரண்டு அடியிலேயே குலை தள்ளிய அதிசய வாழைமரம்

image

நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த யூனுஸ் என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிர் நட்டு பராமரித்து வருகிறார். அதில் ஒரு வாழைமரம் இரண்டு அடி வளர்ந்த நிலையில் குலை தள்ளியது. இதனை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். தற்போது அந்த மரத்தை விவசாயி யூனுஸ் பாதுகாப்பாக வளர்த்து வருகிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News August 8, 2024

தாமிரபரணி கரையில் மீன் சின்ன கல்வெட்டு

image

தாமிரபரணி கரையில் மீன் சின்னத்துடன் கல்வெட்டு இன்று (ஆக.8) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாளை தருவை அருகே தாமிரபரணியில் பச்சையாறு இணையும் பகுதியில் கல் மண்டபம், அதில் மீன் சின்னங்களுடன் கல்வெட்டு உள்ளது. இதை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் தலைமையில் தொல்லியல் ஆர்வலர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து இந்த கல்வெட்டு குறித்த ஆய்வு நடக்கிறது.

News August 8, 2024

சபாநாயகர் தொடங்கி வைக்கும் முக்கிய திட்டம்

image

உயர்கல்வியை ஊக்கப்படுத்துவதற்கான தமிழ் புதல்வன் திட்டத்தை, நாளை காலை 11 மணிக்கு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் அப்பாவு தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, மாணவர்கள் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டையை வழங்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 8, 2024

நெல்லையில் கத்தியுடன் வந்த பள்ளி மாணவர்கள் கைது

image

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சங்கர ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியரை கொல்ல கத்தியுடன் வந்த +2 மாணவர்கள் 3 கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒழுங்கினமாக நடந்து கொண்ட காரணத்திற்காக மதிப்பெண்னை குறைத்த ஆசிரியரை கொல்ல வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 8, 2024

நெல்லையில் மாணவர்களிடையே மோதல்; 6 பேர் கைது

image

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே புதூரில் தனியார் பள்ளியில் மாணவர் பேரவை தலைவர் தேர்வு செய்வதில் மாணவர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் தாக்கப்பட்டார். பள்ளி நிர்வாகம் முதலில் தகராறில் ஈடுபட்ட & காயமடைந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து சமரசம் செய்தது. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவன் போலீசில் புகார் செய்ததை அருத்து வள்ளியூர் போலீசார் 6 மாணவர்களை கூர்நோக்கு இல்லத்தில் இன்று அடைத்தனர்.

News August 8, 2024

பிஎஃப் உதவி ஆணையர் முக்கிய வேண்டுகோள்

image

நெல்லை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலக உதவியாளர் குமாரவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 3 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்காதவர்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையம், ஓய்வூதியம் அளிக்கும் வங்கி கிளை அல்லது பொது சேவை மையம் மூலம் உடனடியாக டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். கைப்பேசி மூலமும் செயலியை பதிவிறக்கம் செய்து சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

அணைப்பகுதிகளில் வறண்ட வானிலை நீடிப்பு

image

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று(ஆக.08) காலை 117.75 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.11 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 125.39 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 451 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை. வறண்ட வானிலை நீடிக்கிறது.

News August 8, 2024

நெல்லையில் ஆக.14ல் ESI குறைதீர்க்கும் முகாம்

image

நெல்லை இ.எஸ்.ஐ. மண்டல இயக்குநர் அருண் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் துணை மண்டலம் சார்பில் இ.எஸ்.ஐ. திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கான குறைகளை தீர்க்கும் பொருட்டு, மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் வரும் 14ஆம் தேதி மாலை 4 மணிக்கு இஎஸ்ஐசி துணை மண்டல அலுவலகத்தில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

நெல்லையில் 3 நாள் வந்தே பாரத் ரயில் ரத்து

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேடை பணிகள் நடைபெற்று வருவதால் நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் 15,16,17 ஆகிய தேதிகளில் பகுதி நேரமாகவும் முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை சென்னை ரயில் எண் 20666 வந்தே பாரத் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் 12632 நெல்லை SF எக்ஸ்பிரஸ் பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!