Tirunelveli

News August 9, 2024

தொழிலாளர்களுக்கு மீதமுள்ள பண பலன்களை வழங்க தீவிரம்

image

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற மாஞ்சோலை நிர்வாகம் பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இதில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு படிவம் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் மீதமுள்ள 75% பண பலன்களை வழங்குவதற்கான விண்ணப்ப படிவம் இன்று வழங்கப்பட்டது.

News August 9, 2024

இன்று முதல் மணிமுத்தாறு, மாஞ்சோலைக்கு அனுமதி

image

நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வனப்பகுதிக்குள் உள்ள அருவி மற்றும் மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் திருவிழா முடிந்த நிலையில் இன்று முதல் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கும், மாஞ்சோலையில் சுற்றுலா செல்வதற்கும் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News August 9, 2024

பாபநாசம் அணை நீர் வெளியேற்றும் நிலவரம்

image

பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று (ஆகஸ்ட் 9) காலை நிலவரப்படி 117.25 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 69.96 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 123.78 அடியாகவும் உள்ளது.
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 410 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, அணையில் இருந்து 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை.

News August 9, 2024

நெல்லைக்கு புதிய துணை காவல் ஆணையர்

image

நெல்லை மாவட்ட புதிய துணை காவல் ஆணையராக விஜயகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மதுரை ஊழல் தடுப்பு பிரிவில் கூடுதல் எஸ்.பி.யாக இருந்தார். தற்போது எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று நெல்லை துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண், தற்போது மணிமுத்தாறு 12வது சிறப்பு காவல் படை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

News August 9, 2024

நெல்லையில் ரேஷன் விநியோக குறைதீர்க்க கூட்டம்

image

நெல்லை மாவட்ட அளவில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோக குறைதீர் கூட்டம் வரும் பத்தாம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். ரேஷன் அட்டைகளில் பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை கைபேசி எண் பதிவு, போன்ற சேவைகளை இந்த நாளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

News August 9, 2024

11 ஆம் தேதி பொறுப்பேற்கும் புதிய சரக டிஐஜி

image

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசியை உள்ளடக்கிய திருநெல்வேலி சரக டிஐஜியாக தற்போதைய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் டாக்டர் மூர்த்தி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அவர் வருகின்ற 11ஆம் தேதி பதவியேற்கிறார். திருநெல்வேலி புதிய காவல் ஆணையாளராக ரூபேஷ் குமார் மீனாவும் வருகின்ற 11ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.

News August 9, 2024

குருவாயூர் எக்ஸ்பிரஸ் மாற்று பாதைகள் இயக்கம்

image

மதுரை கோட்டத்தில் பகல் வேலைகளில் பொறியியல் பிரிவு சார்பில் தூண்கள் நிறுவும் பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குருவாயூரிலிருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் (எண் 16128) நாளை 10ம் தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News August 9, 2024

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்-நெல்லை முபாரக் கண்டனம்

image

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

News August 8, 2024

தமிழக முதல்வரை சந்தித்த கவுன்சிலர்

image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தலைமையில், நெல்லை மாநகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் மன்சூர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

News August 8, 2024

நாளை முதல் காரையாறு கோவிலுக்கு அனுமதி

image

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து நேற்றும், இன்றும் கோவில் வளாக பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் நாளை முதல் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வழக்கம்போல் பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு வனத்துறை சார்பில் அனுமதிக்கப்படுவதாக இன்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

error: Content is protected !!