India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பார்லிமென்ட் தேர்தல் ஓட்டுப் பதிவை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி முதல் நெல்லை, பாளை உட்பட அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. ஓட்டுப்பதிவை முன்னிட்டு நேற்று வரை மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் இன்று திறக்கப்படும். வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இவ்வாறு நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஏப்.20) தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. நெல்லை, பாளை பகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஒலிபெருக்கி மூலம் வாக்காளர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி கொண்டிருந்தனர். இதனால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஓட்டுப்பதிவு சுமுகமாக நடந்ததாக அதிகாரிகள் இன்று (ஏப்.20) தெரிவித்தனர்.
திருநெல்வேலி தொகுதியில் இந்திய கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். அவரின் வெற்றிக்கு உழைத்த நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், மாநகர திமுக சார்பு அணி நிர்வாகிகளுக்கு நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேற்று (ஏப்.19) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார். அவரின் வெற்றிக்கு கடந்த ஒரு மாதமாக உழைத்த திருநெல்வேலி மாவட்ட அதிமுக மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி நேற்று (ஏப்.19) நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதில் பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமுடன் வாக்கு செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமாக 70.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு இடைவிடாமல் நடைபெற்றது. சில இடங்களில் தொடர்ச்சியாக மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் எஸ் ஏ புனித உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாலை ஐந்து மணிக்கு மேலும் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்து வாக்களித்தனர்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தேர்தல் மையத்தில் வாக்காளர்களுடன் ஒருமையில் பேசிய தேர்தல் மைய அதிகாரி ஜெபஸ்டின் கோவில் பிள்ளையை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் மற்றும் வட்டாட்சியர் உதவியுடன் காவல் துறையினர் வாக்கு மையத்திலிருந்து குண்டு கட்டாக வெளியேற்றினர். அவருக்கு பதிலாக அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ் நியமிக்கப்பட்டார்.
திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதில், முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தநர் . மாலை 5 மணி நிலவரப்படி மொத்தமாக 58.39 சதவீதம் மட்டுமே வாக்கு பதிவானது. இதனால் 100% வாக்குப்பதிவு கேள்விக்குறியாகி உள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் நிறுவனங்கள், கடைகள் ஆகியவை பூட்டப்பட்டது. பொதுமக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக மும்முரம் காட்டினர். இந்நிலையில், இன்று மாலை நெல்லை டவுனில் உள்ள புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையில் அல்வா வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் பெரிதளவில் இல்லை. இதனால், களை இழந்து காணப்பட்டது.
திருநெல்வேலி மக்களவை தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி மாநகரம் மற்றும் திருநெல்வேலி புறநகர் பகுதிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதுவரை எந்த ஒரு பிரச்னையும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என நெல்லை மாநகர காவல் துறை கமிஷனர் மூர்த்தி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.