Tirunelveli

News April 24, 2024

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடமிருந்து ரூ.4 கோடி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் 28.51 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க சுயேச்சை வேட்பாளர் ராகவன் வழக்கு தொடுத்திருந்தார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்.22) அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

News April 24, 2024

சாலையில் நடந்து சென்றவர் பைக் மோதி பலி

image

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் டாணா வாட்ச்மேன் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிஹரசுப்பிரமணியன் (56). இவர் ஆம்பூர் மெயின் ரோட்டில் நேற்று (ஏப்.21) நடந்த சென்றபோது அவர் மீது பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 24, 2024

நெல்லை அருகே விரைவாக விற்று தீரும் இளநீர்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் சாலையோர குளிர்பான கடைகளில் தாகம் தணிப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மானூர் வட்டார பகுதிகளில் அதிகாலை விற்பனைக்கு கொண்டுவரப்படும் இளநீர் காலை 10 மணிக்குள் விற்று தீர்ந்துவிடுகின்றன . ஒரு இளநீர் 30 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

News April 22, 2024

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு

image

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை பதிவு இன்று மதியம் ஆரம்பமாகிறது. தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். வரும் மே மாதம் 18ம் தேதி வரை இதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான மாணவ மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.

News April 22, 2024

நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் நெல்லை மாவட்டத்தில் பஸ் மற்றும் ரயில்களில் தொடர்ந்து பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தேவையான இடங்களுக்கு சிறப்பு பஸ் ரயிலில் இயக்கப்படுகின்றன. இன்று (ஏப்ரல் 22) மதியம் 12.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில் நெல்லைக்கு புறப்படுகிறது. இந்த ரயில் நாளை அதிகாலை 12.45 மணிக்கு நெல்லைக்கு வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News April 21, 2024

நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கிடையாது

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது உண்டு.
இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்தாலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நாளை ( ஏப்.22 ) திங்கட்கிழமை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற வாய்ப்பு

image

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலக தெருவில் உள்ள ரேடியன் ஐஏஎஸ் அகாடமியில் தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முகாம் வருகிற 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. 18 வயது நிரம்பிய ஆண் பெண்கள் பங்கேற்கலாம். சேர விரும்புபவர்கள் நேரில் வந்து தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

சித்திர பௌர்ணமி தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் இந்த ஆண்டிற்கான சித்ரா பௌர்ணமி தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் வருகின்ற 23ம் தேதி சிந்துபூந்துறை தாமிரபரணி ஆறு தீர்த்தவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. பகல் 12:30 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பட்டு தீர்த்த வாரி மண்டபத்தில் அடைவர். அங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

நெல்லை: கோடை மழையில் இதை செய்யாதீர்!

image

திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான வட்டம் சார்பில் இன்று(ஏப்ரல் 21) வெளியான செய்தி குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது சில இடங்களில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கோடை மழை பெய்கிறது. இது போன்ற நேரங்களில் மின் பாதை, மின் கம்பம், மின் மாற்றிகள் அருகிலோ, அதன் கீழேயோ பொதுமக்கள் நிற்க வேண்டாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 21, 2024

சேரன்மகா தேவியில் ரயில் மோதி 3 மாடுகள் பலி 

image

செங்கோட்டையில் இருந்து நெல்லை சந்திப்புக்கு பயணிகள் ரயில் இன்று ஏப். 20 மாலை சென்று கொண்டிருந்தது. சேரன்மகாதேவி அருகே இரவு 7.15 மணியளவில் ரயில் சென்ற போது அங்குள்ள செங்கொடி சாஸ்தா கோவில் அருகே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த மாடுகள் மீது ரயில் மோதியது. இதில் மூன்று எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே பலி .ஒரு மாடு கவலைக்கிடமாக உள்ளது.

error: Content is protected !!