India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டம் கருங்காடு பகுதியில் கிராம மக்களுக்கு முறையான குடிநீர் கிடைக்கவில்லை என காலி குடங்களுடன் மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு இன்று (ஏப்.22) போராட்டம் நடத்தினர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மிகப்பெரும் போராட்டம் நடைபெறும் எனவும் அப்பகுதி பெண்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி நெல்லை மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.
திருநெல்வேலி தூத்துக்குடி இடையே 1 -1 பஸ் சர்வீஸ் இயக்கப்படுகிறது. இடைவெளிகளில் நிற்காமல் செல்லும் இந்த பஸ்சிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த பஸ் சர்வீஸ் எண்ணிக்கையை தற்போது வெகுவாக குறைத்துள்ளனர். இதனால் இதில் பயணிப்பவர்கள் இடமின்றி ஒரு மணி நேரத்துக்கு மேலாக நின்று கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாளை (ஏப்.23) உப்பு சர்க்கரை நீர் கரைசல் வழங்கும் முகாம் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இன்று (ஏப்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அம்பாசமுத்திரம் அருகே ஒரே நேரத்தில் நடந்த திருமணம் மற்றும் துக்கம் நிகழ்வுகளால் ஏற்பட்ட மோதலில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலஏர்மாள்புரத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்ட தெருவில் திருமணம் நடந்ததால் இரு வீட்டாருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்தனர். இது குறித்து நேற்று (ஏப்.22) இரவு அம்பாசமுத்திரம் போலீசார் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் நிலையங்களின் வருமானம் மற்றும் பயணிகள் எண்ணிக்கையின்படி 2013 ஏப்ரல் 1 முதல் 2024 மார்ச் 31 வரை மதுரை கோட்டத்தில் முதல் 50 இடங்களை பிடித்துள்ள ரயில் நிலையங்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தில் ரூ.130 கோடி வருமானத்தை அள்ளி கொடுத்து திருநெல்வேலி ரயில் நிலையம் 2023-24ஆம் நிதி ஆண்டில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
துபாயில் 21வது ஆசிய U-20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நாளை (ஏப்.24) முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பெண்கள் பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த கனிஸ்டா டீனா பங்கேற்று ஓட உள்ளார். இந்த வீராங்கனைக்கு திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வீரர்கள், சமூக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் சமேத நித்திய கல்யாணி அம்பாள் கோயிலின் தெப்பத்திருவிழா, இன்று இரவு நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு தெப்பத்திருவிழாவை ,
தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்
வி.எஸ்.ஆர்
ஜெகதீஷ்,
ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்
சவுமியா ஜெகதீஷ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
மேலதட்டப்பாறை சேர்ந்த சிவா ராணுவத்தில் பணியாற்றினார். இவர் கடந்த 2018-ல் சென்னையில் டூ தூத்துக்குடிக்கு ஆம்னி பேருந்தில் சென்ற போது விபத்தில் பலியானார். மனைவி ஸ்ரீபிரியா நஷ்ட ஈடு கேட்டு நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள் சிவா குடும்பத்துக்கு 1 கோடியே 3 லட்சத்து 63 ஆயிரத்து 224 ரூபாய் 7% வட்டியுடன் வழங்க பேருந்து காப்பீட்டு கழகத்துக்கு இன்று உத்தரவிட்டார்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நெல்லை, திருப்பூர், கோவை, திருவாரூர், தஞ்சாவூர், தேனி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.