India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த மகாராஜன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மூளை சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. உறுப்பு தானம் செய்யப்பட்ட மகாராஜனின் உடலுக்கு இன்று (ஜூன் 2) நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மரியாதை செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட நம்பி கோவில் வழிபாட்டுத்தலம் மற்றும் சூழல் சுற்றுலா பகுதிகளில் பொதுமக்கள் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிப்பதாகவும், மறு உத்தரவு வரும் வரை செல்ல வேண்டாம் என திருக்குறுங்குடி வனத்துறையினர் இன்று அறிவித்தனர். இன்று அங்குள்ள ஆற்றில் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தெற்கு ரயில்வே சார்பில் (ஜூன்.2) இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை 6:45 மணிக்கு எழும்பூருக்கு புறப்படும் சிறப்பு ரயிலும் (எண்: 06070) மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் ரயிலும் (எண்: 06069) ஜூன் 6-ம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, பாளை வட்டாரங்களில் வெயில் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. சுமார் 20 தினங்களுக்கு பின்னர் நேற்று (ஜூன் 1) வெப்ப பதிவு 100 டிகிரி தாண்டி 101.3 டிகிரி ஆக பதிவானது. இதனால் இரவிலும் புழுக்கம் அதிகமாக இருந்தது. இன்று (ஜூன்) 2 காலை முதல் வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஏசி மின்விசிறி பயன்பாடு உயர்ந்து கடந்த 3 தினங்களாக மின் நுகர்வு மீண்டும் அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டம் விகேபுரம் அடுத்த அனவன் குடியிருப்பு வேம்பையாபுரம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து புகுந்த சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்ற நிலையில் அங்கு 4 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிரிக்கப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து நேற்று இரவு பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாமஸ் மண்டபம் என்னும் இடத்தில் சாலையில் சென்ற கார் இன்று (ஜூன் 1) கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் ஓட்டுனர் காயத்துடன் மீட்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்துள்ள காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் எஸ்.எம்.எஸ்.டி.எம். என்ற மாதிரி என்ஜினின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. அதன்படி 3வது கட்டமாக 1,700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு நேற்று (மே 31) சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கூந்தங்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம். இதன் பரப்பளவு 1.2933 சகிமீ ஆகும். இப்பகுதி 1994-ஆம் ஆண்டு பறவைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இங்கு 43 இனத்தைச் சேர்ந்த பறவைகள் வருகின்றன. நீண்டு மெலிந்த சிவந்த கால்களையும், மெல்லிய குழல் போன்ற வளைந்த கழுத்தையும், ரோசா வண்ணத்தையும் ஒத்த பூநாரைகள் இங்கு வந்து செல்வது மிகவும் சிறப்பானது.
திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நேற்று (மே 31) தொடங்கியது. அப்போது கல்லூரி முதல்வர் டாக்டர் மலர்விழி கூறுகையில், 15 முதல் 20 வயதுடைய இளைஞர்களுக்கு புகையிலை குறித்த தெளிவு வர வேண்டும். இ-சிகரெட் உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இ-சிகரெட்டால் உடலுக்கு பாதிப்பு குறைவு என்பது போன்ற எந்த ஆய்வு முடிவுகளும் இதுவரை வெளியாகவில்லை என்றார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அயல் நாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்காக அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நல வாரியத்தில் அடையாள அட்டை பெறுவதற்கு கடந்த 15ஆம் தேதி முதல் இணையவழியில் பதிவு செய்ய தொடங்கப்பட்டது. இதற்கான அனைத்து வசதிகளும் விளக்கங்களும் ஆணையரகத்தின் இணையதளத்தில் https://nrtamils.tn.gov.in ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
Sorry, no posts matched your criteria.