Tirunelveli

News April 25, 2024

பிஎஃப் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி துறை சார்பில் குறைதீர்க்கும் கூட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி கூடங்குளத்தில் நடைபெற உள்ளது. இங்குள்ள ஹெப்ரான் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் முகாம் நடைபெறும் என வருங்கால வைப்பு நிதி மண்டல உதவி ஆணையாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

சபாநாயகர் புகாருக்கு இயக்குனர் பதில்

image

நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான நிலத்தை தனியார் தொழில் அபிவிருத்தி நிறுவனம் மோசடி செய்ததாக சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து ஏஎம்ஆர்எல் என்ற தனியார் நிறுவனத்திடமிருந்து 985 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவன இயக்குநர் பேரவை தலைவருக்கு இன்று பதில் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

நெல்லை: காதலர்களிடம் கைவரிசை காட்டிய மூவர் கைது

image

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலர்களை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்த மூவரை போலீசார் இன்று(ஏப்.24) கைது செய்தனர். காதல் ஜோடியான திருவாரூரை சேர்ந்த இளைஞரும் வள்ளியூர் பகுதியை சேர்ந்த பெண்ணும் நேற்று(ஏப்.23) வள்ளியூர் முருகன் கோயிலுக்கு சென்றனர். அப்போது கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து தங்க நகை மற்றும் பணத்தை பறித்த மூவர் மீது வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.

News April 25, 2024

நெல்லை அருகே 2 பெண்கள் கைது

image

கடையம் அருகே மயிலப்பபுரத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சேர்ந்தமரத்தை சேர்ந்த பால்தாய் என்பவர் தனியார் பேருந்தில் வந்தபோது அவரிடம் 500 ரூபாய் பிட்-பாக்கெட் அடித்துள்ளனர். இது தொடர்பாக பங்களா சுரண்டை பகுதியை சேர்ந்த அஞ்சலி(25), பவானி(24) ஆகிய இருவர் மீதும் கடையம் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து இன்று கைது செய்தார்.

News April 25, 2024

நெல்லை: புகைப்பட கலைஞருக்கான விருது அறிவிப்பு

image

நெல்லை மாநகரில் செயல்பட்டு வரும் நெல்லை லைப் என்ற வலைத்தள நிறுவனம் 2024ம் ஆண்டிற்கான புகைப்பட கலைஞர் விருதுகள் வழங்க உள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அழகிய காட்சிகளை சிறந்த முறையில் புகைப்படம் எடுத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்.26ம் தேதி பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

News April 24, 2024

நெல்லையில் தேதி அறிவிப்பு

image

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நெல்லை பிரிவு சார்பில் பாளை அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் சீவலப்பேரி ரோடு நீச்சல் குளத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மூன்று கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் மே 2ஆம் தேதி தொடங்குகிறது. பயிற்சி கட்டணம் ரூ.1770. விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் – 74017035 06 என்ற என்னில் தொடர்பு கொள்ளலாம்.

News April 24, 2024

நெல்லை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்.23) வெளியிட்டுள்ள அறிக்கையில் உங்களுக்கு பரிசு விழுந்ததாக கூறி, செல்போனில் வரும் போலியான Message-யை நம்பி OTP, PIN, Password போன்றவற்றை யாரிடமும் பகிர வேண்டாம். ஒருவேளை பாதிக்கப்பட்டால் 1930 என்ற எண்ணை அழைக்கவும் என தெரிவித்துள்ளனர்.

News April 24, 2024

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் கேரளாவில் பிரச்சாரம்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான புரூஸ், கேரள மாநிலம் ஆற்றிங்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அடூர் பிரகாசை ஆதரித்து இன்று (ஏப்ரல் 23) தீவிர பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து அந்த தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

News April 24, 2024

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற திருநெல்வேலி செயலாளர்

image

திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிட்டார். அவரின் வெற்றிக்கு கடந்த ஒரு மாதமாக சிறப்பான முறையில் பணியாற்றிய திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் இன்று (ஏப்.23) முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News April 24, 2024

BREAKING நெல்லை: பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர்

image

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 36வது வார்டு மாமன்ற உறுப்பினராக சின்னதாய் கிருஷ்ணன் உள்ளார். அவர் இன்று (ஏப்‌.23) தனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்க்கு மனு அனுப்பியுள்ளார். அதில், எனது வார்டு மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு மாநகராட்சி உதவி செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!