Tirunelveli

News April 26, 2024

பஸ் நிலைய கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ்

image

மாநகராட்சி துணை ஆணையர் தாணுமூர்த்தி ஆலோசனைப்படி சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 25 ) மாநகராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாநகராட்சி கடைகளுக்கு தொழில் உரிமம் செலுத்தாத நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் நடைபாதையில் பொதுமக்கள் இடையூராக வைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

News April 26, 2024

மாணவர் சேர்க்கைக்கு தயாராகும் கல்லூரிகள்

image

தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் ஏராளமான பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. புதிய 2024 -25 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கலை அறிவியல் கல்லூரிகள் தயாராகி வருகின்றன. மே முதல் வாரத்தில் பிளஸ் 2 ரிசல்ட் வர உள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பாளை சேவியர் கல்லூரியில் இந்த ஆண்டு 3 புதிய பாடத்திட்டம் இளங்கலையில் அறிமுகம் ஆகிறது.

News April 26, 2024

நெல்லை மாணவன் சாதனை

image

வண்ணாரப்பேட்டை ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் சென்டரில் பயிலும் மாணவன் ஸ்ரீராம் இந்த வருடம் நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 65-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளான். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவனை ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் முதன்மை கல்வி மற்றும் வணிக தலைவர் தீரஜ் மிஸ்ரா நேற்று (ஏப்.25)பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

News April 25, 2024

திசையன்விளை: சதம் அடித்த வெயில்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் நீடிக்கிறது மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திர கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில், இப்போது அக்னி நட்சத்திரம் வெயில் போல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் தொடர்ந்து தினமும் மாவட்ட முழுவதும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகிறது. இந்நிலையில் இன்று திசையன்விளை, பாளையங்கோட்டை வட்டாரத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவானது.

News April 25, 2024

எனக்கு சம்பந்தம் இல்லை: நயினார் நாகேந்திரன்

image

திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களிடமிருந்து ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்.25) செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

நெல்லை அருங்காட்சியகத்தில் போட்டிகள் அறிவிப்பு

image

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஸ்டார் கோச்சிங் சென்டர் நடத்தும் மாபெரும் மாணவர்களின் கோடை கொண்டாட்டம்-2024 போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி மே 3,4ம் தேதிகளில் நடைபெற்று பரிசளிக்கும் நிகழ்ச்சி மே 5ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதன் முன்பதிவுக்கு 94869 78527 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி இன்று(ஏப்.25) அறிவித்துள்ளார்.

News April 25, 2024

திருநெல்வேலிக்கு யூரியா, உரம் வருகை

image

திருநெல்வேலியில் தடையின்றி விவசாயம் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(ஏப்‌.25) தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து 900 மெட்ரிக் டன் யூரியாவும், 320 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரமும் ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வந்தது. இதனை அதிகாரிகள் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்க உள்ளனர்.

News April 25, 2024

விசாரணை கைதி தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை

image

நெல்லை மாவட்டம் பணகுடியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன்(19) நரம்பு தளர்ச்சியால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (ஏப். 24) மாலை திடீரென மணிகண்டன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். நெல்லை அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர்.

News April 25, 2024

உயர்கல்வி வழிகாட்டுதல் மாணவர்களுக்கு அழைப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் வருகின்ற 28 ஆம் தேதி 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் ஜலால் முஹம்மது, யூனுஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளனர். இதில் மாணவர்கள் பங்கு பெற்று பயன்பெற மேலப்பாளையம் ஆபிஸர் அகாடமி நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

News April 25, 2024

விவசாயிகளுக்கு இணை இயக்குனர் ஆலோசனை

image

திருநெல்வேலியில் தற்பொழுது வெயில் வெளுத்து வாங்குவதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகின்றது. இதனால் இறவை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது நீர் இருப்பை பொறுத்து சாகுபடி செய்யும் பயிர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம் இன்று (ஏப்.24) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!