India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பாளை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் உள்ளார். அதற்கு அடுத்தபடியாக பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளனர்.
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக நயினார் நரேந்திரன் முதல் சுற்றில் பின்னடைவில் உள்ளார். நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி முதல் சுற்று பாஜக நயினார் நாகேந்திரன் 2903,
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 3244 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 397 வாக்குகளும், நாம் தமிழர் 479 பெற்றுள்ளது.
திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் தபால் வாக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்த நிலையில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையிலும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வருகின்றார்.
நெல்லை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளார். 2ஆம் இடத்தில் திமுக உள்ளது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 2ஆம் சுற்று இன்னும் சில நேரங்களில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லையில் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இன்று (ஜூன் 4) வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் முதற்கட்டமாக நடைபெற்ற வாக்கு எண்ணும் பணியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் தற்போது தெரிவித்ததாவது: நெல்லை பத்திரிகையாளர்கள் பாளை அரசு பொறியியல் கல்லூரி ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு செல்ல ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள நுழைவு வாயில் வழியாக ஊடக மையத்திற்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர்களுக்கு ஓட்டு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அளிக்க பிஆர்ஓ தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை பாராளுமன்ற தொகுதி ஓட்டு பெட்டிகள் அங்குள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீஸ் கண்காணிப்பில் உள்ளன. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அந்த பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் மொத்தம் 64.1% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் ராபர்ட் புருஸும் (காங்), அதிமுக சார்பில் ஜான்சி ராணியும், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News-உடன் இணைந்திருங்கள்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 3) கூறியதாவது, பாளை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை அல்லது பதிவான ஓட்டுகள் விபரத்தை பதிவு செய்ய கூடாது. ஊடகவியலாளர்கள் ஓட்டு எண்ணும் மையத்தில் குறிப்பிட்ட 5 எண்ணிக்கை சண்ட குழுவாக குறுகிய காலத்திற்கு மட்டும் அழைத்து செயல்படுவர். ஓட்டு எண்ணும் மைய வளாகத்திற்குள் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றார்.
Sorry, no posts matched your criteria.