India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழர் உரிமை மீட்பு கள ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி இன்று (ஏப். 26) கூறியுள்ளதாவது, ஆசிரியை மீது சாதிய தாக்குதல் நடத்திய நாங்குநேரி சிங்கநேரி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை ஏஞ்சல் மற்றும் தலைமை ஆசிரியை சங்கரி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் ரயில்வே நிலையத்தில் திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடமிருந்து 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (ஏப்.26) உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் வடக்கு திமுக இளைஞரணி அமைப்பாளர் பெருமாள் இன்று (ஏப்.26) நெல்லை அருகே ரெட்டியார்பட்டியில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது மறைவுக்கு நெல்லை மத்திய மாவட்ட மற்றும் கிழக்கு மாவட்ட திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து நெல்லை போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வருகின்ற 28ஆம் தேதி உலக நடன தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு நடன போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி இன்று (ஏப்.26) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஏப்.26) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தார். அவரை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தலைமையில் மாநகராட்சி துணை மேயர் ராஜு உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு ஆலோசனை நடத்தினார்.
நெல்லை, பாளையங்கோட்டையில் நேற்று (ஏப்.25) 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
கொக்கிரகுளத்தில் உள்ள நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் 2ம் கட்ட அறிவியல் பயிற்சி முகாம் வரும் மே மாதம் 6ம் தேதி முதல் 10ம் தேதி நடக்கிறது. இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் மாவட்ட அறிவியல் மையத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட அறிவியல் மைய அதிகாரிகள் இன்று (ஏப். 26) தெரிவித்தனர்.
பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த இருவரை தாக்கியதாக 2019ல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் மீது மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் இழப்பீட்டு தொகையை ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரிடமும் சமமாக அரசு அபராதமாக வசூலித்துக் கொள்ளலாம் எனவும் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் இன்று (ஏப். 26) உத்தரவிட்டார்.
திருநெல்வேலியில் பல்வேறு நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்பொழுது நடைபெற்று வரும் மக்களவை பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அவர்கள் மாநிலங்களுக்கு செல்ல விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பிரசன்னா இன்று (ஏப்.26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அகத்தியர் அருவி, பாபநாசம் நகருக்குத் தெற்கிலும், கீழ் பாபநாசத்துக்கு வடக்கிலுமாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த அருவி நீரானது பாபநாசம் நீர்மின் உற்பத்தி நிலையத்தை அடைந்து, பின் அங்கிருந்து பாபநாசம் அணையின் நீர்பிடிப்புப் பகுதியைச் சென்றடைகிறது. அகத்திய முனிவருக்கு சிவன் பார்வதி இவ்விடத்தில் காட்சியளித்ததாக நம்பப்படுகிறது. நெல்லையின் பிரதான சுற்றுலாத் தலமாக இவ்வருவி உள்ளது.
Sorry, no posts matched your criteria.