India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
களக்காடு புது தெருவை சேர்ந்தவர் யாபேஸ்(43) .இவர் கடந்த 25 ஆம் தேதி இரவு தனது வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து நேற்று மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் டீக்கடை வைத்து நடத்தி வரும் வேல்முருகன். இவர் மகன் பேச்சி (26) கடந்த வாரம் வெளியான யூபிஎஸ்சி தேர்வில் 576வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தற்போது நெல்லை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அவரை பல்வேறு தரப்பினர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இன்று (ஏப்ரல் 27) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து விதமான கட்டிடங்களுக்கும் 2024-25ஆம் ஆண்டு முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு அவரது சொத்து வரியில் இருந்து 5% தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலப்பாளையத்தில் மிக முக்கிய சாலையான நேதாஜி சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் இன்று (ஏப்.27) துவங்கப்பட்டது. ராட்சத எந்திரங்கள் மூலம் குழாய்கள் பணிக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் காவல் நிலையம் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.ஓரிரு வாரங்களில் இந்த பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் போக்குவரத்து துவங்கும் என கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வித்துறையின் உத்தரவை மீறி தனியார் பள்ளிகளில் இன்று (ஏப்.27) கோடை விடுமுறை வகுப்பு நடைபெற்று வருகின்றது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகி தமிழகத்தில் தற்பொழுது மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதால் பெற்றோர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் நேற்று (ஏப்.26) 100.22 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் திருநெல்வேலி மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப் பிரசன்னா விடுத்துள்ள செய்தி குறிப்பு: கடைகள் வர்த்தகம், உணவு நிறுவனங்கள், பீடி போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1.4.2024 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத்துடன் இதை உயர்த்தி வழங்க வேண்டும் விளங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு தற்போது தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைக்கின்றனர். இவ்வாறு செயல்படும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கையை இன்று (ஏப்.26) அனுப்பியுள்ளது. இதையும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
நெல்லையில் 2024-25 ஆம் ஆண்டில் விளையாட்டு விடுதி, முதன்மை விளையாட்டு மையம் விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பிரேம்குமார் நேற்று (ஏப்.26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்புக்கு 9514000777 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி அருள்மிகு அஷ்ட புஜ தவயோக வன வாராகி அம்பாள் ஆலயத்தில் பஞ்சமி பூஜை நாளை (ஏப்.28) நடைபெற உள்ளது. காலை 10:30 மணிக்கு ஹோமம் தொடங்கி பல்வேறு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்க கோவில் நிர்வாகிகள் நேற்று (ஏப்.26) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.