Tirunelveli

News April 29, 2024

நெல்லையப்பர் கோவிலில் மாணவிகளின் பரத நாட்டியம்

image

திருநெல்வேலி மாவட்டம் டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் வசந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று (ஏப்.28) இரவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னதாக மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாணவிகளின் பரத நாட்டியத்தை கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

News April 29, 2024

முண்டந்துறை: வரையாடு கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

image

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் முண்டந்துறை வனச்சரக பகுதிகளில் இன்று வரையாடு கணக்கெடுக்கும் பணி வனச்சரகர் கல்யாணி தலைமையில் தொடங்கப்பட்டது. இந்தப் பணியானது ஐந்தலைப் பொதிகை, அடுப்புகள் மொட்டை, அகத்தியர் மலை, செம்பூஞ்சி மொட்டை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த பணி முடிவடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 29, 2024

பொது வரைவு திட்டம்: கருத்து தெரிவிக்க வாய்ப்பு

image

நெல்லை மாநகரில் அடுத்த 17 ஆண்டுகால வளர்ச்சி தொடர்பான பொது வரைவு திட்ட அறிக்கை tirunelvelimasterplan.in என்ற பிரத்தியேக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் முடியவுள்ள நிலையில், மே மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை நகர் ஊரமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே மாநகர மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கருத்து பதிவிடலாம்.

News April 29, 2024

கோடை: நெல்லை டிரைவர்கள் முக்கிய வேண்டுகோள்

image

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் காலை முதல் இரவு வரை அரசு பஸ்களை இயக்கும் நடத்துநர், ஓட்டுநர்கள் விரைவில் களைப்படைகின்றனர். எனவே வெயில் தாக்கத்தை போக்க ஓட்டுநர் நடத்துனர்களுக்கு ஓஆர்எஸ் பாக்கெட் வாட்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News April 29, 2024

நெல்லை அறிவியல் மையத்தில் கண்காட்சி

image

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் மே தினத்தை முன்னிட்டு நாளை(ஏப்.30) ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது. பாளையங்கோட்டை இக்னேசியஸ் பள்ளி மாணவியின் ஓராண்டு ஓவியப் படைப்புகள் “99 தமிழ் தாம்பூல பூக்கள்” எனும் தலைப்பில் கண்காட்சியில் இடம் பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அறிவியல் மையம் செய்து வரும் நிலையில் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News April 28, 2024

தடைக்கு பின்பு அருவியில் குவியும் மக்கள்

image

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அணை உள்ளது. இந்த அணையில் நான்கு மாத தடைக்கு பின்பு தற்பொழுது குளிக்க வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று (ஏப்.28) விடுமுறை நாள் என்பதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தந்து குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

News April 28, 2024

தாழையூத்து பகுதியை சேர்ந்த வாலிபர் வெட்டிக் கொலை

image

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த சந்தனம் (32) என்ற கொக்கிகுமார் இன்று (ஏப்‌.28) காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாழையூத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 28, 2024

அரசு பள்ளியில் சிலம்பப் பயிற்சி முகாம்

image

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சிலம்பப் பயிற்சி முகாம் நடக்கிறது. நேதாஜி சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் 21 வயது மேற்பட்ட இரு பாலருக்கும் இலவசமாக சிலம்பம் கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. மே.1முதல் 20ம் தேதி வரை தினமும் மாலை 5:30 முதல் 6:30 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு பயிற்சியாளர்
விவேகானந்தன் இன்று (ஏப்.28) தெரிவித்துள்ளார்.

News April 28, 2024

துணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் மோசடி

image

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி நேற்று (ஏப்.27) நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவரின் பெயரில் முகநூல் பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் கணக்கு துவங்கி பொதுமக்களிடம் உரையாடல் நடத்தி பணம் பறிப்பதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!