India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 2024-25ஆம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்து வரியை இன்று மாலைக்குள் செலுத்துபவர்களுக்கு அவர்களது சொத்து வரியிலிருந்து ஐந்து சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சி சேவை மையங்களில் வரியை செலுத்தலாம்.
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இன்று (ஏப்.30) காலை ஒரு லாரி திடீரென பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நெல்லை தென்காசி மார்க்கத்தில் இருவழியிலும் செல்லும் வாகனங்கள் சுமார் 5 கிமீ தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. அதன்பின் அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நெல்லை நகரில் போக்குவரத்து முடங்கியது.
மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் மகாராஜன், இவர் சென்னையில் லாரி டிரைவராக உள்ளார். இவர் மனைவி விஜயலட்சுமி 2 குழந்தைகளுடன் வீட்டில் 20ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது முன்பகை காரணமாக அவரது உறவினர் தங்கச்சாமி (28) பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினார். பாளை இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் விசாரித்து தங்கசாமியை நேற்று (ஏப்ரல் 29) கைது செய்தார்.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியினை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது பெற விரும்பும் மக்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஏப்.29) தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட (தென்காசி உள்பட) நீதித்துறையில் 84 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கோடை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்.29) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (7 மணி வரை) நெல்லையில், இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திசையன்விளை அருகே உள்ள வெங்கட்ராயபுரம் கிராமத்தில் தனியார் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு 80 மாணவிகள் மட்டுமே தற்போது படிப்பதால் இந்த பள்ளியை நடப்பு கல்வி ஆண்டுடன் மூடுவதாக நிர்வாகம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று (ஏப்ரல் 29) கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, பள்ளியை தொடர்ந்து அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று (ஏப்.29) பள்ளி மாணவர்களுக்கு கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் தொடங்கியது. இந்த பயிற்சி முகாமானது வருகின்ற மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஹாக்கி, ஜிம்னாஸ்டிக், தடகளம் உள்ளிட்ட போட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் வெப்பத்தினால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சில பகுதிகளில் மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஏப்.29) காலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் மொத்தமாக மாவட்டத்தில் 9 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.