India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி பிஎம்எஸ் ஐடிஐ வளாகத்தில் மாணவர்களுக்கு ரயில்வே தேர்வுகள் பற்றிய இலவச விழிப்புணர்வு கருத்தாகம் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ரயில்வே தேர்வு ஆலோசகர் பாண்டுரங்கன் கலந்து கொண்டு ரயில்வே தேர்வுகள் குறித்தும் தேர்வுகளுக்கு தயார் செய்து பற்றியும் ஆலோசனை வழங்குகிறார். இதில் கலந்து கொள்பவர்கள் 81222 -14189 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இன்று தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் நலனுக்காக புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று புதுடில்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் மற்றும் ஆணையத்தின் நீதிபதியிடம் மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து மனு வழங்கினார். அதில் மக்கள் அங்கேயே குடியிருக்க வழிவகை செய்ய வேண்டும். கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது. நிலம் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரியில் மாணவ மாணவர்களுக்கு என 20 முதல் 30 வயது வரை உள்ள பேறுசார் மகளிருக்கும் அங்கன்வாடி மையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் வைத்து நாளை வழங்கப்பட உள்ளது.

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் அமைக்கப்பட்டுள்ள legal aid defence counsel systemல் பணியாற்ற அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதிக்குள் திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்திற்கு தபால் மூலம் அனுப்பும்படி முதன்மை நீதிபதி இன்று தெரிவித்துள்ளார்.

பாளை., ஆரோக்கியநாதபுரம் அருகே வழக்கறிஞர் சரவணராஜ் என்பவர் நேற்று முன்தினம்(ஆக.,20) 4 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வக்கீலை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை நேற்று பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று(ஆக.21) விடுத்துள்ள செய்தி குறிப்பில், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி, வருகிற ஆக.,20 முதல் அக்.,18 ஆம் தேதி வரை வீடு வீடாக நடைபெறுகிறது. எனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இல்லம் தேடி வரும்போது வாக்காளர்கள் தங்களது பெயர், வயது, புகைப்படம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டத்தில்,
சேரனமகாதேவி அரசு மருத்துவமனை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்,
நேற்று(ஆக.21) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
முன்னதாக சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் உள்ள குற்ற பதிவேடுகள், சிசிடிவி கேமரா செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களில் அங்கீகரிக்கப்படாத டிரேடிங் செயலியை பதிவிறக்கம் செய்து பண மோசடிக்கு உள்ளாக வேண்டாம். இங்கு முதலீடு செய்யும் பணத்திற்கு இரண்டு மடங்கு பணம் கிடைக்கும் என்று செல்போனிற்கு குறுஞ்செய்தி மூலம் வரும் லிங்கை தொட வேண்டாம். இதில் பாதிக்கப்பட்டால் http://cybercrime.gov.in-ல் புகார் அளிக்கவும் என தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி சென்னைக்கு மாற்றப்பட்டு நேற்று உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 57 கல்வி மாவட்ட அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் நெல்லையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு ரமா மற்றும் தேவிகா ராணி ஆகிய இருவர் இடமாற்றம் மூலம் நியமிக்கப்பட்டு இன்று(ஆக.,21) உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் வீடு வீடாக சென்று வாக்களார் பட்டியல் சரி பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணியில் 1810 முகவர்கள் ஈடுபடுகின்றனர். 1.1.2025 தேதியை தொகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வரைவு பட்டியல் அக்டோபர் 29 ஆம் தேதி வெளியாகிறது. அன்று முதல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.