India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (மே 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை காலத்தில் விடுமுறையில் வீட்டில் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்து அவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த உறுதுணையாக இருங்கள் என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
கல்லிடைக்குறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் கைதாகிய ஆறுமுகம், அழகர், முத்துப்பாண்டி ஆகியோர் சிறையில் உள்ளனர். இவர்கள் கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையில் மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா தலைமையில் மே தின விடுமுறை நாளில் திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 103 நிறுவனங்களில் மே விடுமுறை தின சட்டத்தை அமல்படுத்தாமல் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மூன்றடைப்பு அருகே உள்ள தாழைகுளத்தில் முப்புடாதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று (மே 1) அதிகாலை மர்மநபர் கோயில் பூட்டை உடைத்து புகுந்து அம்மன் சிலையில் இருந்த 3 பொட்டு தங்க தாலியை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து கோயில் நிர்வாகி அளித்த புகாரின்பேரில் மூன்றடைப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் அபிஷேக் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகிறார்.
பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் மார்ச் 1 முதல் நேற்று ஏப்ரல் 30 வரையிலான கோடை காலத்தில் தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 212 மிமீ மழையும் மாஞ்சோலையில் 209 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
மே மாதத்திலும் மாஞ்சோலையில் அதிக மழை பெய்யும் என நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மே 1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சேரன்மகாதேவி அடுத்த சக்தி குளம் பகுதியை சேர்ந்தவர் ராமையா மகன் முருகன் (56). விவசாயியான இவரது வீட்டில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் பெட்ரோல் குண்டு மர்ம நபர்களால் வீசப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் தொழிலாளர்கள் மே தின உறுதிமொழி எடுத்தனர். பேட்டை சுத்தமல்லி விலக்கில் ஜனநாயக சுமை தூக்கும் தொழிலாளர் இன்று (மே.1) மே தினம் கொண்டாடினர். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர் சங்க செயலாளர் முத்துக்குமார் தலைமையில் மே தின உறுதி ஏற்பு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், துணைத் தலைவர்கள் அன்புச்செல்வி செல்வம் உட்பட 13 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் வெளுத்து வாங்கினாலும் மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 1) வெளியிட்டுள்ள மழை அளவு செய்தி குறிப்பில் அதிகபட்சமாக காக்காச்சி பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக மாவட்டத்தில் 18 மீட்டர் மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பதை தெரிவிக்க திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலகம் சார்பில் இன்று (மே 1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொடர்பு எண் வெளியிட்டுள்ளனர். அதில் திருநெல்வேலி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் (83000 70283), காவல் ஆய்வாளர் (94981 20504), சார்பு ஆய்வாளர் (94981 95193) ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்படி நெல்லை மாநகரில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் “ஸ்டிராமிங் ஆபரேஷன்” என்ற பெயரில் போலீசார் நேற்று (ஏப்ரல் 30) காலை முதல் இரவு வரை தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு போக்குவரத்து விதி மீறல்கள், பொதுமக்களுக்கு தொந்தரவு செய்தல் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு ஒரே நாளில் 730 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
Sorry, no posts matched your criteria.