India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாளை மகாராஜா நகர் ரயில்வே கேட்டை அடைத்து வைத்து பொதுமக்கள் பாதசாரிகள் ஊனமுற்றோருக்கு இடையூறு செய்து வரும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், மனித நேய மக்கள் கட்சி நெல்லை மாவட்டம் சார்பில் மாநகர் முழுவதும் மத்திய அரசை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் மாநகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடைகால நோய் பாதிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் மருத்துவ ஆலோசனை பெற 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை வராமல் கண்காணிக்கப்படுகிறது. குடிநீர் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் “வணக்கம் நெல்லை” கட்டுப்பாட்டு அறை எண் 9786566111 என்ற கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு தேர்வில் தவறிய மற்றும் ஏற்கனவே பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுவதற்கு வசதியாக வருகிற 10ம் தேதி முதல் சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளன. நெல்லை மாவட்டத்தில் சிறப்பு வகுப்பில் கல்வி மேலாண்மை தகவல் மையம் தளத்தில் மாணவர்களின் வருகை பதிவு செய்யப்படும். இதை தகுதி உள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின்படி நெல்லையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். எனவே கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அவசர தேவை இன்றி வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று (மே 2) விடுத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் கல்லூரி வளாகத்தை திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நேற்று (மே 2) மாலை அவற்றை பார்வையிட்டார். அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவருடன் சென்றனர்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மார்ச் 26இல் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.நேற்று (மே 2) நயினார் உறவினர் முருகன் ஆசைத்தம்பி ஆகியோரிடம் டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
நெல்லை உடையார்பட்டியில் வசிக்கும் குரு மகாராஜன் நெல்லை தனியார் ஸ்வீட் ஸ்டாலில் முறுக்கு வாங்கி வந்துள்ளார். அதனை சாப்பிட பிரித்து பார்த்தபோது அதில் பூரான் இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து கடைக்காரரிடம் கேட்ட போது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று (மே 2) குரு மகாராஜன் உணவு பாதுகாப்பு துறை தலைமை ஆய்வாளருக்கு புகார் அனுப்பி உள்ளார்.
நெல்லையில், மாஞ்சோலை மலைக்கு அருகில் உள்ளது இந்த அழகிய மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி. 65 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக, மணிமுத்தாறு அணை 1958 இல் கட்டப்பட்டது. தாமிரபரணி ஆறு கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க காமராஜரால் கட்டப்பட்டது. அணைகட்டுடன் இருப்பதால் வார இறுதி நாட்களை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் கழிக்க இந்த இடம் ஏற்றதாக உள்ளது. மழைக்காலங்களில் வெள்ல நீராக ஆர்ப்பரித்து காட்சியளிக்கும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் இன்று (மே 2) காலை நிலவரப்படி நீர் இருப்பு 57.20 கன அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக 254.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது . இதேபோல் மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 88.70 கன அடியாக உள்ளது. இதிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது.
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு வரும் 7ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மே 2) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த உத்தரவை ரத்து செய்ய தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.