India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் நேற்று (ஏப்.26) 100.22 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் திருநெல்வேலி மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப் பிரசன்னா விடுத்துள்ள செய்தி குறிப்பு: கடைகள் வர்த்தகம், உணவு நிறுவனங்கள், பீடி போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1.4.2024 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத்துடன் இதை உயர்த்தி வழங்க வேண்டும் விளங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு தற்போது தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைக்கின்றனர். இவ்வாறு செயல்படும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கையை இன்று (ஏப்.26) அனுப்பியுள்ளது. இதையும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
நெல்லையில் 2024-25 ஆம் ஆண்டில் விளையாட்டு விடுதி, முதன்மை விளையாட்டு மையம் விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பிரேம்குமார் நேற்று (ஏப்.26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்புக்கு 9514000777 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி அருள்மிகு அஷ்ட புஜ தவயோக வன வாராகி அம்பாள் ஆலயத்தில் பஞ்சமி பூஜை நாளை (ஏப்.28) நடைபெற உள்ளது. காலை 10:30 மணிக்கு ஹோமம் தொடங்கி பல்வேறு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்க கோவில் நிர்வாகிகள் நேற்று (ஏப்.26) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழர் உரிமை மீட்பு கள ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி இன்று (ஏப். 26) கூறியுள்ளதாவது, ஆசிரியை மீது சாதிய தாக்குதல் நடத்திய நாங்குநேரி சிங்கநேரி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை ஏஞ்சல் மற்றும் தலைமை ஆசிரியை சங்கரி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் ரயில்வே நிலையத்தில் திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடமிருந்து 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (ஏப்.26) உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் வடக்கு திமுக இளைஞரணி அமைப்பாளர் பெருமாள் இன்று (ஏப்.26) நெல்லை அருகே ரெட்டியார்பட்டியில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது மறைவுக்கு நெல்லை மத்திய மாவட்ட மற்றும் கிழக்கு மாவட்ட திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து நெல்லை போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வருகின்ற 28ஆம் தேதி உலக நடன தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு நடன போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி இன்று (ஏப்.26) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஏப்.26) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தார். அவரை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தலைமையில் மாநகராட்சி துணை மேயர் ராஜு உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு ஆலோசனை நடத்தினார்.
Sorry, no posts matched your criteria.