India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமானதை தொடர்ந்து உவரி அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் இன்று (மே 4) சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான சம்பவம் இன்று நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மேலும் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது அவர் எழுதிய கடிதம் ஒன்று வைரலாகி வருகின்றது.
திருநெல்வேலியை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இன்று (மே 4) காலை அவரது சொந்த ஊரில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து கேள்விப்பட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். தான் உடனடியாக நெல்லைக்கு செல்வதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
வணிகர் தினம் நாளை (மே 5) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், திருநெல்வேலி டவுன் போஸ் மார்க்கெட் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்திற்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை முழுவதும் கடைகள் இயங்காது என இன்று கடைகள் முன் வியாபாரிகள் அறிவிப்பு நோட்டீஸ் வைத்துள்ளனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் KPK ஜெயக்குமார் சொந்த ஊரான கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக இன்று (மே 4) காலை மீட்கப்பட்டார். இது காங்கிரஸ் கட்சியினர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது உயிரிழப்பு குறித்து மூன்று தனிப்படை அமைத்து விசாரணை நடைபெறுவதாக திருநெல்வேலி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சமீபத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு லெட்டர் பேடு கடிதம் அனுப்பியிருந்தார். “மரண வாக்குமூலம்” என்ற பொருள் உடன் எழுதிய அந்த கடிதத்தில், கொலை மிரட்டல் வருவதாகவும், சமீபத்தில் தனக்கு மூன்று முறை கொலை மிரட்டல் வந்ததாகவும், சுய நினைவுடன் இதை எழுதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் கே.பி.கே.ஜெயக்குமார். இவர் தனக்கு கொலை மிரட்டல் அடிக்கடி வருவதாக நெல்லை எஸ்பியிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்த நிலையில் உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள இவரது தோட்டத்தில் இன்று காலை (மே 4) எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜெயக்குமார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் தங்களது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருவதாகவும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர்கள் கூறிவருவதால் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இதனால் பாஜக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.