India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜான்சி ராணி டெபாசிட் இழந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று (ஜூன் 6) கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது டெபாசிட் இழக்கும் அளவிற்கு நெல்லையில் நடந்தது என்ன? என்பது குறித்து வேட்பாளர் விரிவாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து அனைத்து கட்சி தலைவர்கள் இன்று (ஜூன் 7) மாலை 3 மணிக்கு கலெக்டரை சந்திக்கின்றனர்.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விஆர்எஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து நாளை மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரை அனைத்து கட்சி தலைவர்கள் சந்திக்கின்றனர்.
நாங்குநேரி காவல் நிலைய பெண் காவலர் ஒருவர் கந்து வெட்டி கேட்டு மிரட்டுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் இன்று (ஜூன் 6) பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க சிலம்பரசன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். காவலரே கந்துவட்டி கேட்டு மிரட்டிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கான செட் தகுதி தேர்வினை நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கான செட் தகுதி தேர்வு நாளை நடைபெற இருந்த நிலையில் தேர்வானது ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் சார்பில் இன்று(ஜூன் 6) அறிவிக்கப்பட்டுள்ளது .
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்ட கனிமொழி ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் இருவரும் நேற்று (ஜூன் 5) சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வின் போது பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மதிமுக சார்பில் திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட துறை வைகோ அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை திருநெல்வேலி மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கே எம் எ நிஜாம் நேற்று( ஜூன் 5) மாலை நேரில் சந்தித்து இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 6) நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதாகவும், இன்று காலை வரை பாளையங்கோட்டையில் 5, நெல்லையில் 5.60, நாலு முக்கு பகுதியில் 10, ஊத்து பகுதியில் 12 மில்லி மீட்டர் அளவுகளில் மழை பெய்துள்ளது என்றும் மேலும், மாவட்டம் முழுவதும் 32.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள 420க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி.இ, பிடெக் போன்ற இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தமிழக உயர்கல்வித்துறை சார்பில் தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று(ஜூன் 6) நிறைவு பெறுகிறது. விண்ணப்பிக்காதவர்கள் தவறாமல் விண்ணப்பிக்கவும்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நெல்லை முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் இன்று (ஜூன் 6) தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலை முதலே பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று மாலை பாளையங்கோட்டை, திருநெல்வேலி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனை அடுத்து திருநெல்வேலியில் 5.6 மில்லிமீட்டர் மழை பதிவும்,பாளையங்கோட்டையில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இன்று காலை நெல்லை மாவட்ட நீர்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.