Tirunelveli

News May 5, 2024

மறுப்பு அறிக்கை வெளியிட்ட மாவட்ட காவல்துறை

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை இன்று (மே 5) மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, “இறந்து போன ஜெயக்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மரண வாக்குமூலம் கடிதம் அளித்ததாக கூறி சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது” என தெரிவித்துள்ளனர்.

News May 5, 2024

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் தலைவர்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். அவரது இறுதி சடங்கு திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் இன்று (மே 5) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொள்ள உள்ளார். உடன் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.

News May 5, 2024

நெல்லை: வாலிபருக்கு அரிவாள் வெட்டு

image

நெல்லை, ராமையன்பட்டி சிவாஜி நகரை சேர்ந்தவர் மதன் (30). அதே பகுதியைச் சேர்ந்த  தீபன் (27). முன் விரோதம் காரணமாக நேற்று மதனின் வீட்டிற்கு சென்ற தீபன் மற்றும் அவரது நண்பர் முகேஷ் (28) இருவரும் தகராறில் ஈடுபட்டு மதனை அரிவளால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மதன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

News May 5, 2024

ரயிலில் தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

image

நெல்லை ரயில் நிலையத்தில்
தவறவிட்ட நகையை போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர். நேற்று (மே.4) காலை நெல்லைக்கு வந்த கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஒருவர் தவறுதலாக அருகில் இருந்த பையை சேர்த்து எடுத்துச் சென்றார். பின் அதனை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நாகர்கோவிலை சார்ந்த சசிரேகாவின் பை என தெரிந்ததால் அதில் இருந்த 15 பவுன் நகையுடன் பையை போலீசார் சசிரேகாவிடம் வழங்கினர்.

News May 4, 2024

காங்கிரஸ் தலைவர் உடல் நல்லடக்கம் அறிவிப்பு

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் இன்று எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் உடல் நல்லடக்கம் நாளை 10:00 மணியளவில் கரைசுத்துபுதூர் கிராமத்தில் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.

News May 4, 2024

தலைவர் குறித்து எஸ்பி பரபரப்பு பேட்டி

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் இன்று (மே.4) சடலமாக மீட்கப்பட்டார். அவரது இறப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம், ஜெயக்குமார் மரண வாக்குமூலம் எழுதிய கடிதம் எனக்கு வரவில்லை என கூறினார்.

News May 4, 2024

கண்காணிப்பு கேமரா மூலம் உடற்கூறு ஆய்வு 

image

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூறு ஆய்வு சற்று முன் தொடங்கியது. உடற்கூறு ஆய்வு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 4, 2024

எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை

image

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மே.4) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் தவறுகளை சமரசம் இன்றி சுட்டிக் காட்டும் சவுக்கு மீடியா மற்றும் அதன் ஊழியர்கள், செய்தியாளர்கள் மீதான வழக்குகளும், தொடர்ச்சியான கைதுகளும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News May 4, 2024

ஜெயக்குமார் மரணம்: ரூபி மனோகரன் பரபரப்பு பேட்டி

image

காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ இன்று (மே.4) செய்தியாளர்களிடம் கூறியதாவது, மறைந்த ஜெயக்குமார் தனசிங் தனது நெருங்கிய நண்பர் கட்சிக்காக தீவிரமாக உழைத்தவர். அவரது விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்துவதில் எந்த உண்மையும் இல்லை. பின்புலத்தில் யாரோ செயல்படுகின்றனர். காவல்துறை உண்மையை கண்டறியும் என வலியுறுத்தியுள்ளார்.

News May 4, 2024

காங்கிரஸ் நிர்வாகி சடலம்: Ex அமைச்சர் கண்டனம்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உயிருக்கு ஆபத்து என புகார் அளித்தபோதே காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டிருக்க மாட்டார் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!