Tirunelveli

News May 6, 2024

நெல்லை: மாணவி மாநில அளவில் 3-வது இடம்

image

இன்று வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவில் பாளை சின்மயா வித்யாலயா பள்ளி மாணவி நிலஞ்சனா 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தை பெற்று நெல்லைக்கு பெருமை சேர்த்துள்ளார். நெல்லை மாவட்ட அளவில் இந்த மாணவி முதலிடம் பெற்றுள்ளார். இந்த மாணவியை பள்ளி தாளாளர் லட்சுமி நிரஞ்சன், முதல்வர் சங்கர பாகம், பயிற்றுவித்த அசிரியர்கள் ஆகியோர் இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.

News May 6, 2024

நெல்லை எஸ்பி அவசர உத்தரவு

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமாரின் உடல் மே.2ம் தேதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அது சம்பந்தமாக 2 கடிதத்தில் அவர் எழுதி வைத்த நபர்களிடம் இன்று(மே.6) காலை விசாரணை நடத்தப்படுகிறது. இதையடுத்து அந்தந்த காவல் நிலையங்களில் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

News May 6, 2024

திருநெல்வேலியின் நெல்லையப்பர் கோயில் சிறப்பு!

image

தேவாரப் பாடல் பெற்ற பாண்டியதலங்களில் ஒன்றாகும் இந்த திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில். இத்தலத்தை பற்றி மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 7ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலத்தை சேர்ந்த இத்தலம் ஆசியவிலேயே மிகப்பெரிய சிவதலமாக விளங்குகிறது. 10 அடி உயரமுள்ள வெள்ளை நிற நந்தி சிலையும் அமைந்துள்ளது.

News May 6, 2024

+2 RESULT: நெல்லையில் 96.44% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் மாவட்டத்தில் தேர்ச்சி 93.67% பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 95.07 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 97.48% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 6, 2024

காருக்குறிச்சி: மண்பானை விற்பனை ஜோர்

image

கோடை வெயில் கொளுத்தும் நிலையில் மண்பான பொருட்கள் தயாரிப்பில் பிரசித்திப்பெற்ற சேரன்மாதேவி அருகே உள்ள காருக்குறிச்சியில்,  மண்பானை தொழில் களைக்கட்டியுள்ளது. இங்கு விதவிதமான மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றிற்கு தமிழக மற்றும் இன்றி கேரளா, கர்நாடகாவில் இருந்தும் ஆர்டர் கொடுக்கப்பட்டு வாங்கி செல்வதாக இதை தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News May 6, 2024

காங். தலைவர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார்(60) மர்மமான முறையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 7 தனிப்படையை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அவர் உறவினர்கள் வழங்கிய கடிதங்கள் மற்றும் இறந்து கிடந்த இடத்தில் கிடைத்த தடயங்கள் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மரணத்திற்கான மர்ம நீடிக்கிறது.

News May 6, 2024

நெல்லை: தொடரும் அலைகளின் சீற்றம்!

image

தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று(மே 6) நெல்லை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் எனவும் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

News May 6, 2024

நெல்லை: ‘கோடை கொண்டாட்டம்’ பரிசளிப்பு விழா

image

நெல்லை அரசு அருங்காட்சியகமும், ஸ்டார் கோச்சிங் சென்டரும் இணைந்து மாணவர்கள்  திறமைகளை வெளிப்படுத்தும் ‘மாபெரும் கோடை கொண்டாட்டம்’ 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவியப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், நடனம், சிலம்பம், யோகா போன்ற போட்டி நடைபெற்றன. இதன் பரிசளிப்பு விழா நேற்று(மே 5) இரவு நடந்தது. காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமை தாங்கினார்.

News May 5, 2024

நெல்லை மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடு

image

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது.
www.tnresults.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
மாணவர்கள் பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும். நெல்லையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி இன்று( மே 5) தெரிவித்தார்.

News May 5, 2024

நாங்குநேரி அருகே விபத்து: இருவர் பலி

image

நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தில் இன்று காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளைய நயினார் குளத்தை சார்ந்த ரத்தினசாமி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!