India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குறிப்பன்குளம் வெடிமருந்து தயாரிப்பு ஆலையில் நேற்று(ஆக.,31) முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் பணியில் இருந்த 4 தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். இதில் கண்ணன், விஜய் ஆகிய இரு தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சைக்காக பாளை., அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் செல்வம் என்பவரும் நேற்று இரவு(செப்.,1) உயிரிழந்தார்.

திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் தினம்தோறும் பல்வேறு அரசு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இன்று அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணிக்கு மாவட்ட ஊராட்சி அலுவலக கட்டிட திறப்பு விழா மற்றும் மாலை 4.30 மணிக்கு மகிளா காங்கிரஸ் பேரணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் வருடாந்திர விழாவில் ஆவணி மூலத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா இன்று (செப்டம்பர் 2) காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான கரூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சியளிக்கும் வைபவம் அம்பலவான சுவாமி கோயிலில் வரும் 12-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறும் என கோயில் நிர்வாக அலுவலர் ஐயர் சிவமணி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் 3 தினங்களாக காற்றின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. திசையன்விளை மற்றும் பாளையங்கோட்டை வட்டாரத்தில் வெப்பத் தாக்கம் இன்று பகலில் வெகுவாக குறைந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக 94 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. ச

நாகர்கோவில் மாநகர மகளிர் காங்கிரஸ் சார்பில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி நடைபயணம் இன்று (செப்.1) தொடங்கியது. இதனை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர். உடன், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், தமிழ்நாடு மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையது மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளை (செப். 2) மாலை 3.30 மணி அளவில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர். இதில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நாளை புதுப்பிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நெல்லைக்கு வருகை தர உள்ளனர். மேலும் இதில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப், முன்னாள் அமைச்சர் மைதீன் கான் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட கழிவு செய்யப்பட்ட 1 நான்கு சக்கர வாகனம், 7 இருசக்கர வாகனங்கள் வருகின்ற 4ஆம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் வாகனத்தை ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் பார்வையிட்டு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மத்திய ரயில்வே அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், நெல்லை-சாளுக்கியா ரயிலை தென்காசி வரை நீட்டிக்கவும், மும்பை – மங்களூர் மற்றும் நேத்ராவதி ரயில்களை நெல்லை வரை நீட்டிக்கவும், மதுரை – சம்பர்க் கிரந்தி ரயிலை நெல்லை வழியாக செங்கோட்டைக்கு நீட்டிக்கவும், மேலும், தீபாவளிக்கு நெல்லை-தென்காசி-சிவகாசி வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித் தேவன் 309வது பிறந்தநாள் விழா இன்று(செப்.01) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த போலீசார் ஏராளமானோர், நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவன் மணி மண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.