India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மே 8) விடுத்துள்ள வானிலை பதிவு: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்திய நிலையில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை, இரவில் நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், மதுரை, தேனி, கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்ததால் அவரது இல்லம் அமைந்திருக்கும் கரைசுத்துப்புதூர் பகுதியில் 10 கிமீ தூரத்திற்கு சிசிடிவி கேமராக்களை போலீசார் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆவதற்கு முன்வரை பேசியவர்களிடம் மட்டுமல்லாமல் ஜெயக்குமார் வீட்டின் அருகில் உள்ள டவரில் பதிவான எண்களைக் கொண்டும் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் அவருக்கு பணம் கொடுக்க வேண்டிய நபர்களின் விவரங்களை குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் ஜெயக்குமாருக்கு கொடுக்க வேண்டிய 50 லட்சம் பணத்தை அவரது குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைத்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் மர்மமான இறப்பு குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஆறு நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் குறித்த தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் 10 தனிப்படைகள் அமைத்து பல்வேறு இடங்களில் இன்று (மே 8) போலீசார் கூலிப்படையினரை குறி வைத்து தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ராஜன் ஏப்ரல் 30ஆம் தேதி ஓய்வு பெற்றதை அடுத்து புதிய மாவட்ட கல்வி அலுவலராக சே.பாலன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று (மே 8) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குழியை சேர்ந்த தந்தை, மகனை மர்ம நபர்கள் இன்று (மே 8) அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் தந்தை டேவிட் (56) சம்பவ இடத்திலேயே பலியானார். மகன் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் குறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கேபிகே ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் அவர் பயன்படுத்தியுள்ள இரண்டு செல்போன்களையும் காணவில்லை. இதனால் விசாரணைக்கு உதவியாக மேலும் இரண்டு தனிப்படைகள் நேற்று அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மொத்தம் பத்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்வாக இன்று (மே 8) காலை பந்தக்கால் நட்டு விமரிசையாக துவங்கியது. 40 நாட்களுக்கு மேலாக நடைபெறும் ஆனி பெருந்திருவிழாவின் முதல் விழாவான பந்தக்கால் நடும் விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தாிசனம் செய்தனர். நிர்வாக அலுவலர் ஐயர் சிவமணி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
பாளையிலிருந்து திருச்செந்தூர் வரை செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பெரும்பாலான இடங்களில் பணி முடிந்து சில இடங்களில் சாலையின் ஒரு பகுதியில் அங்கு குழிதோண்டும் பணி நடக்கிறது. அந்தப் பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் போதிய அளவு இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து way2 செய்தி சுட்டிக்காட்டியது. இதன் எதிரொலியாக தற்போது அங்கு பெரிய அளவில் தடுப்புகள் வைத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் இன்று (மே 7) அரசு பேருந்து மோதியதில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பலியானார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பணகுடி போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.