India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளருமான மாணிக்கராஜா நேற்று (மே 9) இரவு தேவர்குளத்தில் உதவி ஆய்வாளரை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வரும் மக்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். அப்பொழுது மக்களுக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பதாக அவர் உறுதியளித்தார். இதில் அமமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
ஆந்திரா மாநிலத்தில் வரும் 13ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு பணிக்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயுதப்படை போலீசார் நவீன ஆயுதங்களுடன் 150 பேரும், 250-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிக்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.
கே.டி.சி. நகர் டீச்சர் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அப்பகுதியில் ஒர்க் ஷாப்பில் வேலை செய்துவருகிறார். இவர் தனது மனைவியைப் பிரிந்து 2வது திருமணம் செய்ததால் மனைவி குடும்பத்திற்கும் இவருக்குமிடையே விரோதம் இருந்துவருகிறது. இந்நிலையில் நேற்று (மே 9) மணிகண்டனை 3 பேர் கொண்ட கும்பல் ஒர்க் ஷாப்பில் வைத்து சரமாரியாக வெட்டியது. காயமடைந்த மணிகண்டன் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி பவளமாலை அலங்காரத்தில் காட்சியளித்தார். நெல்லையப்பர் கோவில் வசந்த விழாவின் 16ம் நாள் நிகழ்ச்சியில் நேற்று (மே 9) இரவு சுவாமி காந்திமதி அம்பாளுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. அப்போது நெல்லையப்பர் பவள மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையில் பாபநாசம், காரையார் அணை அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பாண தீர்த்தம் அருவி. காரையார் அணையிலிருந்து 15 நிமிடம் படகில் பயணித்து இந்த அருவியை அடையலாம். ஆனால் இந்த அருவிக்கு 10 ஆண்டுகளுக்கு மின் தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர் கோரிக்கையின் பின் இந்த அருவியை பார்க்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. முன்பதிவு செய்து இந்த அருவியை சுற்றிப் பார்க்கலாம்.
நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 12ஆம் தேதி நெல்லையில் கனமழை பெய்யக்கூடும். மேலும், மே 13 முதல் மே 15 வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி வருகிற 11ஆம் தேதி பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்திலும், 14ஆம் தேதி வள்ளியூர் தெற்கு கள்ளி குளத்தில் உள்ள டிடிஎம்என்எஸ் கலைக்கல்லூரியிலும் காலை 9 மணி முதல் மாலை 3:30 மணிவரை நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.09) கனமழை பதிவாக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு 6 தினங்கள் கடந்த நிலையில் உண்மை குற்றவாளி யார் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இந்த நிலையில் அவர் இறந்தபோது மாயமான அவரது 2 செல்போன் இருப்பிடத்தை கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தொழில் நுட்ப ரீதியான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். செல்போன் கிடைத்தால் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. நேற்று பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நெல்லை மூலக்கரைப்பட்டி சிவந்திபட்டி, சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 12 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.