Tirunelveli

News June 16, 2024

கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது

image

பாளை பகுதியைச் சேர்ந்த வள்ளிநாயகம் கடந்த 6ம் தேதி தச்சநல்லூர் சிவன் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் நின்ற போது அங்கு வந்த ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த சிவபெருமாள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இது குறித்து வள்ளிநாயகம் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவபெருமாளை நேற்று கைது செய்தனர். இவர் பாஜக நிர்வாகி ஆவார்.

News June 15, 2024

நெல்லை: மிளகாய் பொடி தூவி தாலி செயின் பறிப்பு

image

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் அருகே இன்று(ஜூன் 15) வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி தாலி செயினை பறித்து சென்றுள்ளனர். சிறில் என்பவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அவரது மனைவியை கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் மீது மிளகாய் பொடி தூவி 9 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி வீடியோக்களை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 15, 2024

நெல்லை: கலப்பு திருமணங்களுக்கு அணுகவும்

image

சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணங்களுக்கு, காதலர்களுக்கு சாட்சி கையெழுத்திட திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை எப்பொழுதும் அணுகலாம் என
நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஸ்ரீராம் இன்று (ஜூன் 15) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்திலும் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

News June 15, 2024

பாளையங்கோட்டையில் 7பெண்கள் உட்பட 12 பேர் கைது

image

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் ஓர் இளம் ஜோடி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பிரச்சனை உருவானது. இதனையடுத்து அந்த ஜோடி க்கு உதவியதால் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை நேற்று (ஜூன்14) ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடியது. இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 7 பெண்கள் உட்பட 12 பேரை கைது செய்தனர்.

News June 14, 2024

நெல்லையில் குறைதீர் முகாம்

image

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள்
குறைதீர்க்கும் முகாம் தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஜூன் ‌14) நடைபெற்றது. திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

News June 14, 2024

நெல்லை: வேலைவாய்ப்பு அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 20ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, மாவட்ட தொழில்நெறி வழி காட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார். காலை 10:30 மணிக்கு தனியார் துறையினர் பங்கேற்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில், விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி மற்றும் பிற சான்றுகளுடன் பங்கேற்று பயன்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

News June 14, 2024

நெல்லை: 20ஆம் தேதிக்கு பின் மழை கொட்டும்

image

நெல்லை மாவட்டத்தில் இந்த மாதம் 20ஆம் தேதிக்கு பின்னர், தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என திருநெல்வேலி தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வானிலை செய்தி அறிக்கையில், 89 அடியாக உள்ள பாபநாசம் அணையின் நீர் இருப்பு 110 அடியாக உயர வாய்ப்பு உள்ளது. நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் நிரம்ப வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

ஜெயக்குமார் வழக்கில் முக்கிய தடயம் சிக்கியது

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாருக்கு முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி வெங்கட்ராமன், ஐ..ஜி அன்பு, எஸ்.பி முத்தரசி ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், ஒரு முக்கிய நபரின் செல்போன் எண்கள் குறித்து தீவிர விசாரணை நடப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

News June 14, 2024

நெல்லை காங்., தலைவர் மரணம்; சிபிசிஐடி விசாரணை

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மாதம் 4ஆம் தேதி கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், நேற்று ஜெயக்குமார் உடல் கிடந்த கரைச்சுத்துப்புதூர் தோட்டத்தில் பிற்பகல் 3 மணி முதல் 5.20 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து, குடும்பத்தின மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

News June 14, 2024

மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம்; சிஇஓ தகவல்

image

நெல்லை மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கான உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தகுதியான தலைமை ஆசிரியர்கள் தங்கள் விபரங்களை சரி பார்த்து கொள்ள வேண்டும் என்றும், திருத்தங்கள் ஏதாவது இருந்தால் உடனடியாக முதன்மை கல்வி அலுவலகத்தை அணுக வேண்டும் என்றும் கூறினார்.

error: Content is protected !!