India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய கல்வி ஆண்டில் நெல்லை அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இங்கு குரல் இசை, நாதஸ்வரம், தவில் தேவாரம் பரதநாட்டியம் வயலின் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்சிவிக்கப்படுகின்றன. 12 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04622900 926 மற்றும் 94438 10 926 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான இசை பயிற்சி வகுப்புகளில் சேர ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அரசு பண்பாட்டு மையத்தின் மூலம் நாதஸ்வரம் தேவாரம், தவில் உள்ளிட்ட பாரம்பரிய இசை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை, விலையில்லா கணினி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் இன்று (மே.11) தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 29.3.2012இல் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்பொழுது மர்மமான முறையில் உயிரிழந்த திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கும் ராமஜெயம் கொலை வழக்கும் ஒரே மாதிரி உள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு சந்தேகம் அடைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி கனவு என்ற சிறப்பு கருத்தரங்கு பாளை நேருஜி கலையரங்கில் வைத்து இன்று (மே 11) நடைபெற்றது. நெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர் கார்த்திகேயன் கலந்துகொண்டு கையேட்டினை வெளியிட மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து நாள் முதல்வன் திட்டம் குறித்து சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட அதிகாரிகள் விடுத்துள்ள செய்தி குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அவ்வப்போது இடி மின்னலுடன் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த மின்னலுடன் மழை பெய்யும்போது பொதுமக்கள் மின்பாதைகள், டிரான்ஸ்பார்மர், மின் சாதனம் உள்ள இடங்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும் நேற்று சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அந்த வகையில் சேர்வலாறு அணையில் 2 மில்லி மீட்டரும், கண்ணடியின் அணைக்கட்டில் 1 மில்லி மீட்டரும் மொத்தமாக மாவட்டத்தில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 11) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி கனவு என்ற சிறப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று (மே 11) காலை 9.30 மணிக்கு பாளை நேரு சிறுவர் கலை அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைக்க உள்ளார். போலீஸ் கமிஷனர் மூர்த்தி புத்தகத்தை வெளியிடுகிறார் உயர் கல்வி பயில விரும்பும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். சிறப்பு கண்காட்சியும் நடைபெறுகிறது.
உதவி பேராசிரியர் பணிக்கான டி.என்.செட் தேர்வு ஜூன் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30 என நெல்லை பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்த தேதியை தற்போது மே 15ஆம் தேதி மாலை 5 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பல்கலைக்கழகச் பதிவாளர் சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார்.
12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் பாளை மகாராஜநகர் ஜெயேந்திர சில்வர் ஜீப்ளி பள்ளி மாணவர்கள் கடந்த 5 வருடங்களாக மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்து வந்தனர். ஆனால் இந்த வருடம் 12 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெறாததால் இந்த சாதனையை தக்க வைக்க முடியவில்லை. இந்தப் பள்ளியின் சாதனை கை நழுவிப்போனது.
Sorry, no posts matched your criteria.