Tirunelveli

News May 14, 2024

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் 346 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இதன் நிறைவு விழா நேற்று (மே 13) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மண்டல முதுநிலை மேலாளர் பிரேம்குமார் தலைமை வகித்தார்.

News May 13, 2024

கோடை மழை மின்வாரியம் அறிவுறுத்தல்

image

நெல்லை மாவட்டத்தில் கோடை மழை பெய்வதால் மின்வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோடை மழை இடி மின்னலுடன் பெய்யும் போது வீட்டில் மிக்ஸி, கிரைண்டர்,கணினி, செல்போன் போன்ற மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மின் கம்பங்கள், மின் பெட்டிகள், மின் மாற்றிகள் ஆகியவற்றை தொட வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு இன்று பாளை மண்டல மேற்பார்வை மின் பொறியாளர் செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

News May 13, 2024

நெல்லை கலெக்டர் தகவல்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (மே 13) தெரிவித்ததாவது, நெல்லை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆதரவு சிகிச்சை, இயன்முறை சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்காக 3,69,545 நபர்கள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

News May 13, 2024

முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு

image

மத்திய அரசால் திருத்தம் செய்த முப்பெரும் சட்டங்கள் குறித்த 5 நாட்கள் பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட ஆயுதப் படை அலுவலகத்தில் வைத்து தொடங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார் துணை காவல் கண்காணிப்பாளர் தங்ககிருஷ்ணன் ஜெயராஜ் மீனாட்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

News May 13, 2024

பள்ளி மாணவிகளை பாராட்டிய கல்வி அமைச்சர்

image

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த10ம் வகுப்பு மாணவி சஞ்சனாஅனுஷ் , 2ம் இடம் சுபகாயத்திரி , பாக்கிய லெட்சுமி, 3ம் இடம் ரஷிகா மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் 2ம் இடம் பிடித்த பஜாஸ்லின் பிரீத்தி ஆகிய மாணவிகளை இன்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பாராட்டினார். அப்போது பள்ளியின் தாளாளர் கிரகம்பெல் உடன் இருந்தார்.

News May 13, 2024

மணமக்களை வாழ்த்திய முன்னாள் அமைச்சர்

image

புளியம்பட்டி பகுதி அதிமுக அவை தலைவர் அண்ணாதுரை – கிளேராஎலிசபெத் இல்ல திருமண விழா பாளை முருகன் குறிச்சியில் உள்ள மதுரம் மினி ஹாலில் வைத்து இன்று நடைபெற்றது. தமிழக முன்னாள் செய்தித்துறை அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி எம்எல்ஏ-வுமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ மோகன் கலந்து கொண்டார்.

News May 13, 2024

நெல்லை மழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

ஜெயக்குமார் கொல்லப்படுவதற்கு முன் சித்திரவதை

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 தினங்கள் கடந்துவிட்டன. போலீஸ் விசாரணையில் புதிய புதிய தகவல்கள் வெளியாகின்றன. அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் 4 மணி நேரமாவது சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என உடற்கூறு ஆய்வு முடிவுகளின்படி சந்தேகிக்கப்படுகிறது. அவர் உடலில் கடப்பாக்கல் மற்றும் முள் கம்பிகள் வைத்து முழுமையாக கட்டப்பட்டிருந்தது.

News May 13, 2024

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்

image

இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு அரசு சார்பில் தடுப்பூசி செலுத்தும் முகாம் பாளை மிலிட்டரி லைன் பள்ளிவாசலில் வைத்து இன்று(மே 13) நடைபெற்றது. நெல்லை மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் கீதாராணி கலந்துகொண்டு முகாமினை  துவக்கி வைத்தார். மிலிட்டரி லைன் பள்ளிவாசல் தலைவர் செய்யது அப்பாஸ், செயலாளர் பசுல் ரகுமான், உதவி தலைவர் கமாலுதீன் கலந்து கொண்டனர்.

News May 13, 2024

நெல்லை: மழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!