India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மின்வாரியத்தினர் இன்று(செப்.,14) விடுத்துள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் SOLAR ROOF TOP திட்ட சூரிய ஆற்றலுக்கு மாறி மின் சேமிப்பு செய்யலாம். விருப்பம் உள்ளவர்கள் pmsuryaghar.gov.in, tnebltd.gov.in/usrp/applycfa என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசின் மானியப் பயன்கள், குறைந்த ஆற்றல் பில்கள், அதிக சேமிப்பு, மலிவு பராமரிப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என தெரிவித்துள்ளனர்.

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய கல்லூரி பேராசிரியர் ஜெபாஸ்டின் மீது புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆபாசமாக பேசிய கல்லூரி பேராசிரியர் நேற்று(செப்13) இரவில் கைது செய்யப்பட்டார். மற்றோரு பேராசிரியர் தலைமறைவானார். இச்சம்பவம் பாளை., பகுதியில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாளை., அம்பை, சேரை., நெல்லை பகுதிகளில் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 20 ஆயிரத்து 223 பேர் இன்று(செப்.,14) TNPSC குரூப் 2, 2A முதல் நிலைத் தேர்வு எழுதுகின்றனர். இதையொட்டி மாவட்டம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேர்வு நடக்கும் இடத்திற்கும், தேர்வு முடிந்த பின் செல்வதற்கு ஏதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SHARE IT.

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வருகிற 17ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்து மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 4 ஆவது சுற்று ‘புருசெல்லாசிஸ்’ நோய் தடுப்பூசி பணி வருகிற 18ஆம் தேதி தொடங்கி அக்.,15 வரை நடைபெற உள்ளது. இந்த நோயை தடுக்க 4 to 5 மாத வயதுடைய கெடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி ஒரு முறை செலுத்துவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை பெற இயலும் என தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் பழமையான ரயில் நிலையம் ஆகும். இங்கு 5 நடைமேடைகள் உள்ள நிலையில், மேலும் 2 நடைமேடைகள் அமைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து தற்போது பணிகள் தொடங்கியுள்ளன. இதில் முதற்கட்டமாக அங்குள்ள தளம் சமன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபமாக நெல்லை ஜங்ஷன் 2 ஆம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இரண்டாவது கோடை காலம் போல அக்னி நட்சத்திர நாட்களை நினைவுபடுத்தும் வகையில் வெப்பம் உயர்ந்து வருகிறது. நெல்லை, பாளையங்கோட்டை வட்டாரத்தில் இன்று(செப்.13) அதிகபட்ச வெப்ப பதிவு 103 டிகிரியாக உயர்ந்தது. சுட்டெரித்த வெயில் காரணமாக சாலைகளில் செல்பவர்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.

பேச்சிபாறை பெருஞ்சாணி சித்தாறு 1 & 2 அணைகளில் மொத்தம் 3300 மி.க. அடிக்கு மேல் நீர் இருந்தால் ராதாபுரம் கால்வாயில் நீர் திறக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் 6000 மி.க அடி நீர் இருந்தும், சபாநாயகரே மனு அளித்தும் கூட நீர் திறக்காத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என முன்னாள் ராதாபுரம் அதிமுக MLA இன்பதுரை இன்று தனது ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட மலை கிராமங்களில் பிபிடிசி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு வழங்கி வெளியேற்ற முற்பட்ட நிலையில், அது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வருகின்ற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மாஞ்சோலை காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர்களிடம் நேரில் விசாரணை மேற்கொள்ள உள்ளது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தாவிடம் நேற்று எம்எல்ஏ சண்முகையா கொடுத்த மனுவில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 7:30 மணிக்கு தூத்துக்குடி புறப்படும் ரயில் நேரத்தை காலை 7:10 மணிக்கும், தூத்துக்குடியில் இருந்து காலை 8:40 மணிக்கு புறப்படும் நேரத்தை 8:10 ஆகவும் மாற்றி இயக்க வேண்டும். மாணவர்கள் அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள் என்றார்.
Sorry, no posts matched your criteria.