India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் நேற்று (மே 13) பரவலாக கோடை மழை பெய்தது. இன்று காலை 6 மணி வரை மாவட்ட முழுவதும் மொத்தம் 102.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டை நெல்லையில் தலா 18 மில்லி மீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறு 15 மிமீ., கொடுமுடியாறு 12, நம்பியாறு 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நாங்குநேரி, நான்கு முக பகுதியில் தலா 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருநெல்வேலி மாவட்டம் 12 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 89.14% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 82.39 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.74 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் இருந்து சென்னையில் ரயிலில் கடந்த மாதம் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் பாஜக நிர்வாகி முரளி ஆகியோருக்கு இன்று சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே பி கே ஜெயக்குமார் மரணம் தொடர்பான விவரங்கள் ஒரு வாரத்திற்குள் தெரியவரும் என தென்மண்டல போலீஸ் ஐஜி கண்ணன் நெல்லையில் நேற்று (மே 13) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தனிப்படை போலீசார் விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. வழக்கின் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என்றார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் நேற்று நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தமாக 98.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக பாளையங்கோட்டை, ராதாபுரம், திருநெல்வேலி பகுதிகளில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 14) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் அம்பை, மணிமுத்தாறு, நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாபநாசம், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இதில் அதிகபட்சமாக பாளையங்கோட்டை, ராதாபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாகவும், விசாரணை திசை மாறி இருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்கள் 89.80% பேரும், மாணவியர் 96.29% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 93.32% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாநில அளவில் 11வது இடம். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காங்கிரஸ் நிர்வாகி மர்மமான உயிரிழந்த நிலையில் நேற்று திருநெல்வேலியில் ஐஜி கண்ணன் ராமஜெயம் கொலை வழக்கையும் கேபிகே ஜெயக்குமார் சந்தேகம் மரணமும் ஒன்றாக கருத முடியாது. ராமஜெயம் வழக்கினை எடுத்த மாத்திரத்திலேயே கொலை என அறியப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர் மரணத்தை அவ்வாறு கூற முடியாது என தெரிவித்தார்.
முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த மாடசாமி மனைவி ஆண்டாள் (60) என்பவர் நேற்று ஆடு மேய்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் மழை பெய்ததால் சாலையோரத்தில் மரத்தடியில் நின்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் மூதாட்டி ஆண்டாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.